சதிபதியாய் வாழ
- வளியில் ஒளியாகி நிற்கிறாய்
- ஒளியில் வெளிச்சமாய்த் தெரிகிறாய்
- களிப்பில் உற்சாகமளிக்கிறாய்
- வளமாய் வாழ்வியல் வாழ்ந்திட உத்வேகமளிக்கிறாய்
- சதிபதியாய் வாழச் சங்கல்பம் அருள்கிறாய்
- கதி நீயெனச் சரணடைந்தோர்க்கு நற்கதி நல்குகிறாய்
- பதி நீ பசுக்களுக்குப் பாந்தமாய் பந்தமாகிறாய்
- விதிவசம்கூட உன்னருட்கருணையாலுன் வயமாக்குகிறாய்
- நதியாய் ஓடி வந்தருள்கிறாய்
- கடலாய் விரிந்து வியாபித்து மகிழ்வித்து மகிழ்கிறாய்
- படகாய் சம்சார சாகரத்தில் வந்து மீட்கிறாய்
- குடகு, கயிலை, பொதிகையாய், இயற்கையில்,
- பிரக்கிருதியாய் உறைகிறாய்
- இன்பமயம் இல்ல உள்ளமெல்லாம் சாயிமயம் வயம் லயமே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: