தருவாயே நற்பவி

ஏழ்பிறப்பும் தொடர்ந்துவரும் பரப்பிரம்மம் நீயே ஊழ்வினை களற்றிவிட உதவுவதும் நீதானே பாழ்மனதில் மும்மலங்கள் சேராமற் காத்தருள்வாயே உன் மலரடி தஞ்சம்புகுவோர்க்குத் தாழ்ந்து தயை செய்யாமல் விரைந்தருள் தந்து தான்தயை செய்தேகாத்தருள்கிறாய் தருவாயே நற்பவியாம்நற்கதியாய் உன் கருணையும் அபயஹஸ்த ஆசியுமே மண்ணுக்கும் விண்ணுக்கும்Read More

உன் குங்குமப் பூப்பாதத்தில்

குங்குமம் மஞ்சளுக்குக் குறைவில்லை உன் குங்குமப்பூப் பாதத்தில் பணிந்திடவே பொங்கும் புது வாழ்வுக்குப் பஞ்சமில்லை அதில் அங்கம் வகித்திட்ட தெய்வமுனை நினைந்திடவே மங்களங் களருள்வாய் சாயி மங்கள நாயகியே மகிமைகள் புரிந்திட்டே இமையாய்க் காத்திடுமெங்கள் இதயவாசி கருணைத் தெய்வமே உன் அன்பொன்றேRead More

இப்பிறவி பெற்ற பயன்

புல்லினத்தின் சிறு துல்லியப்பனித்துளியின் குளிர்ச்சியாயிருக்கிறாய் சுவாமி புத்தம் புது வகையாய்க் கருணையிலே ஆத்மாவில் தோய்த்தெடுத்தானந்திக்க வைக்கிறாய் மன உடல் நோய்களுக்குப் புனித விபூதியளித்தாட் கொண்டனுபூதியளித்தருள்கிறாய் நல்லனவைகளை நித்தமுறுதுணையாய்ச் சேர்த்தே சத்தியமாயதை வாழ்வியலில் வளமுடன் நிறைவேற்றுகிறாய் சத்தமின்றிச் சங்கீதமாய்ச் சிரித்தே அபயம் நல்குகிறாய்Read More

தேன் பாகும் திகட்டிவிடும்

தித்திக்கும் தேன் பாகுந்திகட்டிவிடு மதிகமாயின் எத்திக்கும் தானாய்ப் பாயும் புகட்டிவிடு மமுதமாயுமுனை நிந்தித்த மனங்கூடச் சிந்தித்துன்னில் மாற்றங்கொள்ளும் அது துள்ளித்திரிந்துன் அன்புக் கடலில் சங்கமமாகும் அள்ளித்தருமுன்னருட் கருணைதனில் அங்கம் வகிக்கும் பள்ளித்தலமனைத்தும் கோவில்செய்தே காவலாயிருக்கிறாய் பற்பல சேவைப் பணிகளைச் செய்திடச் சங்கல்பமளிக்கிறாய்Read More

இதய தெய்வம்

பொற் குமுதமே அபரஞ்சிச் சொக்கத் திருவே பர்த்தியம்பதியின் கற்பகத்தருவே சனாதனதர்மத்தின் சத்திய வடிவொளியே ஆன்மீகக் கீதைப் பக்திப்பாதையின் ஒளியாம் வளியே யெங்களின் விழியே பக்தி வழியே வடிவே ஆராவமுதனும் ஆடும்தில்லை நடராசனும் பரப்பிரம்மஸ்வரூப அண்டமுமான அகிலமே உனை ஆராதித்தலில்தானே சுகமே, இகமே,Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0