தூய உள்ளம் வேண்டும்
- இதயமில்லா உயிர்களில்லை
- இன்ப, துன்ப, உணர்ச்சிகளில்லா இதயமில்லை
- அதைப் பார்க்கக் கண்கள் வேண்டும்
- கேட்கக் காதுகள் வேண்டும்
- உணரத்தூய உள்ளம்வேண்டும் என்றாய்
- அன்புக்கருணை தந்தாட்கொள்ளும் அரவிந்த கேசவா
- மாதவா உன்பாதாரவிந்தம் தொழத் தருவாயே
- எங்களாதாரச் சொந்தம், பந்தம், நீதானென்றுணர
- வைத்திடும் அக்கேதாரனும் நீயன்றோ
- அது தான் மெய்யுமன்றோ
- மூலாதாரன், ஆலாலகண்டன், வேலாயுதன்,
- சாயி மணிகண்டன், தத்தாத்ரேயர்
- அனைத்துமுன் வடிவம் அதில் நீ படிவமும் அன்றோ
- அலை, கலை, மலை மகள்களும்
- ஆதிசக்தி, அனந்தகோடிபிரம்மாண்டநாயகியும்
- பர்த்திவாசினி, சிவசக்திஸ்வரூபிணியுமுந்தன்
- அருட்சக்திக் கொடையன்றோ.
- அணுவில், அண்டத்தில், பரப்பிரும்மமாய் வியாபித்ததுந்தன்
- அன்பர்களைக்காத்தருளத்தானே, தானே இறங்கி
- இரங்கி, வருகிறாய் நற்பவி நல்கவே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: