தெரிந்து தேர்ந்தெடுத்த தாய்

  • ஈஸ்வரனின் தாயே ஈஸ்வரம்மா இன்றுன் நினைவில்
  • ஈசனின் நினைவும் சங்கமிக்கின்றதம்மா
  • மூன்று உருண்டைகள் முக்கண்ணனுக்காக அளித்தாயே !!
  • முப்புர சம்ஹாரகாரனின் தாயாய் உன்னை
  • நினைத்துப் பேச வைத்தாயே !
  • பால சாயின் அவதாரத்தில் பல வகை
  • லீலைகள் பார்த்திருப்பாய்
  • சீரடி சாயின் தெய்வீகப் படச்சுருளுன் மகளுக்குக்
  • கிட்டியதும் (வெங்கம்மா)
  • கற்பக விருட்சத்தில் ஆப்பிள் ஆரஞ்சு, மா திராட்சை,
  • பறித்துக் கொடுத்ததையும்
  • சித்திராவதி ஆற்று மணல்பரப்பிலும்,
  • குன்றின் மேலும், பலவிதக் காட்சிகள்,
  • அற்புதங்கள் நீ கண்டிருப்பாய்
  • முக்கண்ணையும், இருளில் பேரொளி
  • தெரிந்ததையும் அறிந்திருப்பாய்
  • புரோகிதருக்கு நரசிம்ம அவதாரத்தையும்
  • சுகாதார அதிகாரிக்கு நெற்றியில் சோதியையும்,
  • பக்தர்க்கு தசாவதாரங்களையும், மலர் ஊஞ்சல்,
  • பிருந்தாவனக் கண்ணனையும்,
  • வேய்ங்குழல் கீதம், நாதத்தையும், சுவாமி அளித்த
  • பல லீலைகளைக் கண்டும் கேட்டும் பார்த்தும்
  • ரசித்தும் இருப்பாய் அம்மா
  • சுவாமியின் அருட்கருணைப் பேரானந்தத்தில்
  • கலந்து சங்கமித்த நதிகள் பல பார்த்திருப்பாய்
  • சுப்பம்மா அம்மாவுடன் நீ சீரடி சமாதிக் காட்சி பார்த்து விட்டாய்
  • சச்சிதானந்தரருக்களித்த அறிவுரையில்
  • சாத்வீகத்தை உணர்ந்திருப்பாய்
  • பிணி தீர்க்கும் வைத்திய நாதனாக உன்
  • தனயனைப் பார்த்திருப்பாய்
  • மைசூர் அரச வம்ச அன்பு பக்தியையும், அறுவை சிகிச்சை
  • அத்தியந்த பக்தனுக்குச் செய்ததையும் பார்த்து இருப்பாய்
  • கடலிலே ஆதிசேஷன் சயனக் காட்சி,
  • கடல் நீரிலே தேவாமிர்தம் தந்தது
  • பால சாயின்லீலா வினோதங்கள் – என
  • எத்தனையோ பார்த்திருப்பாய்
  • கல்வி, கட்டிட, மருத்துவ, நாராயண சேவை, குடிநீர்,
  • பக்தர்களுக்கு அன்பான ஆறுதல்,
  • அன்புச் சிபாரிசுகள் இப்படி உன்
  • சேவைகள் எத்தனையோ எப்படியோ நீண்டதம்மா
  • மலரும் நினைவுகளாய்ச் சில லீலைகளை
  • அசை போட்டதுதான் அம்மா இவை>
  • அறிவில் அடங்கா அற்புதங்கள் பல உள்ளதம்மா பின்னே
  • தாயாய் அனைவர்க்கும் தயையாய் சுவாமியே
  • தேர்ந்தெடுத்த தெரிந்தெடுத்த தாயே
  • இப்பிறவிக்குத் தேர்ந்தெடுத்ததாய் நீதான்
  • என்றுரைத்த பகவானுடன் இந்த நினைவுகளை
  • ஸ்வாமியுடன் நினைந்து உன்னை போற்றுகிறோம்
  • அம்மா நினைந்து உன்னப் போற்றுகிறோம் அம்மா
  • ஸ்வாமியின் சரிதச் சரித்திர நாயகித்தாயே!
  • தவமே அனைவரையும் அன்புடன் காத்து
  • என்றும் துணை இருப்பாய் தாயே
  • என்றும் துணை இருப்பாய் தாயே
  • உனைப்பாட இக்கருணை அளித்த நம்
  • பகவானுக்கு நன்றி தாயே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0