தேவர்மாதப் புனிதம்
- வீசு தென்றலுடன் வாசமுல்லையிலுன்
- வசீகரம் தேவர் மாதப் புனிதத்திலும் மாசிலா
- நிலவினிலுமுன் மந்தகாச முகதரிசனம்
- அல்லனவைகளுன் பக்தர்களத் தொடராததுன் கரிசனம்
- நீ வகுத்திட்ட கீதைப்பாதைதான் சத்தியப்பாதை
- அது எங்கள் அதிசயம், அற்புதானந்தம்
- உனதனைத் தன்பருளுரை அறவுரைகளென்றுமே சத்தியம்
- உலகிலென்று மழியாத சாஸ்வத முன்சங்கல்பமது
- எப்போதும் நித்யம், சாத்தியம், சத்தியம்
- மரகதலிங்கனுன் பங்கயப்பொற்பாதம்
- பணிந்தெழுவதுந்தன் சாந்நித்தியம்
- ஸ்ரீ சத்ய சாயிநாத தெய்வமே உனக்கு அனந்த
- ஆத்மானந்த வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்