மனதோடு உறவாடி
- மயில் மீது ஏறி வருவான் சாயி முருகன்
- நம் மனதோடு உறவாடி மகிழ்வான் அந்த மால்மருகன்
- திருப்புகழைத் துதிபாடச் செய்வானந்தக் குமரக்கந்தன்
- அழகு சுப்ரபாதம் பாடத் துயில் எழுவானந்த சாயி வேலாயுதன்
- குன்றுதோறும் நின்றாடும் பேரழகனவன்
- கன்றுபோலப் பாசமிகும் வேலனவன்
- மன்றில் ஆடும் ஈசனின் இளைய புதல்வனவன்
- அன்றலர்ந்த பூவாயருள் வழங்கும் கார்த்திகேயன்
- பார்த்தனும் பரமனும், பரசிவனும், சாயீசனுமாய்ப்
- பர்த்தி சுப்பிரமணிய சுவாமியுமாய், எப்பெயரிலழைத்தாலும்
- சுபக் கீர்த்தி வழங்கும் சரவணன், குகனவன்
- கார்த்திகை தீபச் சுடரொளியின் கார்த்திகேயன்
- பூரண நிலவொளியின் பூர்ணிமையான வடிவேலன்
- நாரணன் நான்முகன் தத்தாத்ரேய சிவ ஸ்வரூப சரவணன்
- பிரணவப் பொருளுரைத்த சிவனுக்குக்கும்
- குருவான சுவாமிநாதன்
- முக்தி, சக்தி, பக்தியளித்து நற்பவியளிக்கும் சேந்தன்
- வினை நீக்கி விந்தை புரியும் சண்முகன் சன்மதன்
- பிரசாந்தி சிவசக்தி ஸ்வரூபப் பரப்பிரம்மம் ஸ்ரீ சத்திய சாயிநாத
- சக்தி மைந்தன் சாயி தேவசேனாபதி சரணம் போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்