குருவாய்

  • குருவே தெய்வமாய்க் குவலயத்தில வதரித்த
  • குமுதமே சாயீஸ்வரா
  • குலம் தழைக்க அருள் புரிய வந்த நித்திய தெய்வத்தின்
  • தெய்வமே சத்தியசாயீசா
  • பன்மதப்பக்தர் கூடும் பர்த்தியம்பதியில் பார்சிறக்க
  • வந்துதித்த சாயீஸ்வரா
  • அவனிதனில் அன்பு மனம், மதம், ஆழ்கடலாய்ப்
  • பரவச் செய்திட்ட அருளமுதமே பர்த்தீஸ்வரா
  • உன் பதம் நாடி யுன்னருள் வேண்டியுனைத்
  • தேடி யோடிப்பாடி வரும் உன் அத்தியந்த
  • ஆத்மார்த்த பக்தரகள் அகமலர, மகிழ,
  • அன்புதனையூன்றி அரவணைத்தே
  • விதைக்கின்றாயதில் சனாதன
  • தர்மமதை மட்டுமே பசுமையாய் விளைவித்து
  • வினைவிலக்கி அதிலுன் கருணை மழையைப்
  • பொழிவித்தே காக்கின்றாய் சாயீசா, பரமேஸ்வரா
  • உன் பங்கயத் தாமரை மலரடிகள் தொழுதிடவும்
  • உன் சங்கல்பம்தான் வேண்டிட, வேண்டும்
  • உன் சாத்வீகமதில் மலர்ந்து மனம் வீசவேண்டும்
  • போற்றியுன்னடிகளுக்கு ஆத்மவந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0