சூரிய சந்திரனாய்
- மணம் வீசும் மலர்களிலுன்வாசம் – உன்
- அத்தியந்த ஆத்மார்த்த பக்தர் மனங்களில்தான்
- உன் நிரந்தர வாசம்
- என்றுமே உன் அடியார்கள் பக்த அன்பர்கள் மேலுந்தன் நேசம்
- எங்கள் பக்திமீதுதானுன் பாசமது கருணை
- அன்றுமின்று மென்றுமே சாயி நீதானே
- எங்களின் சுவாசம், சுவாசகம்
- உன் சத்சங்கம் பஜன் சேவைப்பணிகளின்
- சேவகர்கள்தானெங்கள் சகவாசம்
- உன் நாமஸ்மரணை ஜெபதவம் தானெங்கள் சுகவாசம்
- பரப்பிரம்மம் நீதானெங்கள் பரம,
- பவித்திரப் புனிதம் சுகம், சுபம்
- வியாழனில் குரு தெய்வமாய், வெள்ளியில் விடிவெள்ளியாய்
- சூர்யசந்திரனாய்ப் பஞ்சபூதங்களாய் எங்கள்
- ஸ்ரீ சத்திய சாயி நாதா நீ வரவேண்டும் அருள்நீ
- தர வேண்டும் உன் மலரடி சரணம் ஈசா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்