கருணை செய்கிறாய்
- வாச மலர்களில் வாசனையாய் நீயிருக்கிறாய்
- பாச மனங்ளில் அன்பாய் ஆட்சி செய்கிறாய்
- நேச நெஞ்சங்ளில் பிரேமையாய்க் கொலுவிருக்கிறாய்
- பூசை உள்ளங்களில் கருவறையில்
- கொலுவிருந்து குடிகொண்டிருக்கிறாய்
- தேசங்களில் தெய்வமாயுலவி அருள்பாலிக்கிறாய்
- காசினியில் கடவுளவதாரமாய்க் கருணை செய்கிறாய்
- மேதினியில் பர்த்தித்தலம் நோக்கி வரவழைக்கிறாய்
- உலகமெங்கும் வியாபித்து விரவிப் பரவியிருக்கிறாய்
- தரணியில் தயாபரணாய்த் தயை செய்வித்து வருகிறாய்
- ஞாலத்தில் ஞாயிறாய் வலம் வருகிறாய்
- நான்மறையில் வேதமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறாய்
- தேன்தமிழாய் நாவினில் நர்த்தனமிடுகிறாய்
- சுந்தரத்தெலுங்கினில் சுந்தரமாயுரைத்து மகிழ்விக்கிறாய்
- மந்திரவார்த்தை “சாயிராம் சாய்ராமென’ விளிக்கச் செய்கிறாய்
- கற்பகத்தருவிலுன் பொற்பதம் பதித்திருக்கிறாய்
- உன் சொற்பதங்களில் பற்பல அதிசயங்கள் செய்திருக்கிறாய்
- உன் நற்பதமலர் தொழுவோர்க்கு நற்பவி நல்கி வருகிறாய்
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: