அறுபத்து நான்கிலும்
- கவின்மிகு கலைகள் அறுபத்தி நான்கிலும் உன் சாந்நித்தியம்
- எழில்மிகு இயற்கை எல்லாமுன் சங்கல்பம்
- குயில் தருமிசையும் உனது படைப்புப் பரண்
- எங்கள் வாழ்வியலுக்கு நீதானே என்றும் அரண்
- உனது அன்பு, அருள், அற, உரைகளைக்
- கேட்டால் வராது முரண்
- குழல் தரு வேணுகானம் உன் ஏழிசையின் பண்
- தயைதரு பர்த்தித் தலமுன் ஆன்மீகச் சனாதனக் கூடம்
- தருமமிகு பக்திப்பாதையில் தானுன் அன்பர்தம் திருக்கூட்டம்
- தந்தை தாயுமாகி நின்று கருணை செய்யு முந்தன் பரம்
- பொன்னார் மேனிதானுந்தன் நிறம்
- சத்தியமே உன்னருட் கருணையின் தரம்
- இக்கலியுகத்தில் தெய்வத்தின் தெய்வமாய்
- நீ கிட்டியது எங்கள் வரம்
- கற்பக மரம் கூட உன் கருணையில் கனிகள் தந்தது நிஜம்
- பக்தர்கள் நாங்கள் என்றுமே உன் பதமலர் அடியில் தஞ்சம்
- நெஞ்சில் நீ இருக்கையில் அன்புக்கு ஏது பஞ்சம்
- தாயே உந்தன் மடிதான் எங்களின் மஞ்சம்
- கொஞ்சம் கூட வற்றாத உன் கருணை தன்னை மறவாதே
- உன்ஆத்ம பக்தர்களெங்களின் நெஞ்சம்
- முந்தையே உன்முடிவிலாக் கருணையால் முப்போது
- மெப்போதும் தப்பாது காத்திடுவாய்
- வஞ்சம் கூட உன் அருளில் வாடிப்போய்விடும்
- உன் அத்யந்த பக்தர்களின் ஆத்மார்த்தம்
- இமயத்தை விஞ்சும், இதயத்தில் தங்கும்
- பஞ்சமென்பதேதுன் கருணையாலே உன்னைச் சிக்கெனப்
- பிடித்திட பக்தரிதயம்தான் உன் பக்தியில் மிஞ்சும்
- ‘நானிருக்கப் பயமேன்’ எனும் உன் வாக்கினில் பயமே அஞ்சும்
- எங்கள் பரப்பிரம்ம ஸ்ரீ சத்ய சாயி நாதனே போற்றி போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்