சர்வ தெய்வமாய்
- முத்தமிழும், முதுபெருங்கலைகளும் முக்கனியும்
- நீயானாயதில் மூவுலகும் முகிழ்ந்திருக்கும்
- முகவரியே நீயானாயதில்
- முகுந்த, கேசவ, மாதவ, யாதவ, நந்தகோபனும், நீயானாயதில்
- அரி, அரன், முத்தேவியருமாய்ச், சகல தெய்வங்களும்
- நீயானாயதிலுன்
- அத்யந்த, ஆத்மார்த்தப், பக்தர்கள வரவர்கள்
- துதித்திடும் சர்வ தெய்வம் நீயானாயதில்
- ஸ்ரீ சத்யசாயி தெய்வமா யவதரித்து வந்து
- அன்புதெய்வமாய்ச் சகலருக்கும் சாஸ்வதமாய்க்
- கருணைசெய்கிறாய், கடைத்தேற்றுகிறாய்
- இருவினைகளகற்றி இன்னல்கள் தீர்க்கிறாய்
- வேண்டும் நல்லன தந்து இனிதாய் வாழவைக்கிறாய்
- மனிதம் தருகிறாய், மாண்பு செய்கிறாய்
- லீலா வினோதங்கள் புரிந்து அதிசயிக்க வைக்கிறாய்
- எங்கும் எதிலும் காட்சி தந்து மாட்சி செய்கிறாய்,
- பிறவாமை தந்து மீட்சியளிக்கிறாய்
- மும்மலங்கள் நீக்கி முக்தியும் தருகிறாய்
- பற்பல சேவைகளாற்றிடச் சக்தி தருகிறாயுன் சனாதன
- தர்மத்தில் பக்தி தருகிறாய், சித்தியளிக்கிறாய்
- சிவமாய்ச் சீலமளிக்கிறாய்
- உன் பொற்பத மலரடிகள் பாதார விந்தம் பணிதலின்றியிப்
- பிறவிப்பயனேது சுவாமி ? சரணம் போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்