என்னுடனிருக்கிறாய்

  • அன்பினுக்கு ஏதுஎல்லை ? அவ் வானமும் பூமியும் கூட
  • இல்லை யுன்னன்புக் கருணைக்கே, இது மெய்யே
  • யுகம் தோறும் ஈரேழு லகமும், தொடர்ந்து வரும் பந்தம்
  • பாந்தம், சொந்தம்
  • பழவினைகள் பலனாய் இருவினைகள்தான்
  • தொடருமதில் அல்லன நீக்கி அற்றவை
  • போக்கி உற்றதை மட்டும் உரைத்து உறைவிப்பாய்
  • சுவாமி, என்னுடன் நீ இருக்கிறாரென்று எண்ணாமல்
  • என்னுள்ளேயே உறைகிறாரென்ற எண்ணத்தை
  • உள்வாங்கிக் கொண்டால் நீ
  • ஆட்கொண்டிருப்பதையும் சாயி
  • உன் ஆட்டுவித்தலையும் உணர்ந்துன்
  • கீதைப்பாதைப் வழிநடந்துன் சனாதன தர்மத்தில்
  • திளைக்கலாமுன் சங்கமத் திருவகடிளில்
  • பணியலாமுன் சாந்நித்யத்தால் மலரலாம்,
  • ஆன்மீக பக்திப்பாதைதனில் மிளிரலாம்
  • ஸ்ரீ சத்திய சாயி நாராயணா, வேத பாராயணா
  • குறையென்றேதுமில்லை சுவாமி
  • உன் திருவடித் தாமரைகளுக்கு ஆத்மார்த்த வந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0