நகர்வலத்தினுள்
- வான்முகில்களின் நகர்வலத்திலுன் வியாபகப்
- பிரதட்சணம் தெரிகிறது
- நீல மேகங்களின் ஊர்வலமுன் கார்மேக வண்ணமதை
- நினைவு கூர்கிறது, பிரத்யட்சமாகிறது
- பாடும் குயிலின் இனிமை, அதன்கானம் நீதான்
- என்றுணர்த்துகிறது
- வீசும் தென்றலின் சுகத்திலுமுனைத் தரிசித்த
- சுகானுபவம் புரிகிறது
- தெய்வீக உன் தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனத்திலுன்
- இப்பிறவிப்பயன் உணர்கிறது
- நீ பணித் திட்ட சேவைகளாற்றிட ஆத்மா நெக்குருகும்
- ஆத்ம ஆகர்ஷணம் தெரிகிறது
- நான்கு யுகமும், மூன்று உலகங்களும், எங்கும் எதிலும்
- பரப்பிரும்ம, முனைத்தொடர, உயிர் நினைக்கின்றது
- இப்பிறவிப் பயனுன்னவதார காலத்திலென்று சந்ததியே
- நன்றிகள் நவில்கிறது
- இப்பிறப்பில் உன் மகிமைகள் கேட்டு, கண்டு, பார்த்து, படித்து,
- உணர்ந்தவை, எண்ணிலடங்கா எண்ணிக்கைகளே
- உலகு, உயிர், இறைவன், அனைத்தும் நீயே சுவாமி
- உன் பாதாரவிந்தம் தொழுதிட ஆதாரமாய்
- நீ சேதாரமின்றிக் காத்தருள வரவேண்டும்
- ஸ்ரீ சத்ய சாயி தெய்வமே
- உனக்கு ஆனந்த வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்