ஆழித்தேரழகு

  • சுந்தர பாதம் சுகம்தரும் பாதம்
  • இடர் நீக்கிச் சுடர்தரும் சுகந்த பாதம்
  • எதிர்வரும் துன்பம் தீர்த்து புதிராகப்
  • புனர்வாழ்வளித்திடும் புனிதப் பாதம்
  • நினைத்தாலே தானாய்த் தானே தேடிவரும் பாதம்
  • மனதில் நினைத்தால் உடன் வந்து தேனாய்
  • நலம்தரும் தாயுமானப்பாதம்
  • சினம் தவிர்த்து குணத்தால் அன்புடன்
  • வாழச் சொல்லும் அழகுப் பாதம்
  • பிரேம மயமாய் மக்கள் சேவையாற்றிடச் சொல்லும்
  • சாயீசன் பாதம்
  • ஓரடி எடுத்து வைக்க எண்ணிலடங்கா அடிகள்
  • எடுத்தோடி வரும் ஓம்காரப் பாதம்
  • நாடிவந்து நற்பவிமட்டு மளித்திடும் நற்கதிப் பாதம்
  • தேடி வரும் அடியார்க்குத் தேவை அறிந்து
  • தயை செய்யும் தார்மீகப் பாதம்
  • ஆடிவரும் ஆழித்தேரழகு போல் பஜன் பாடுகையில்
  • நடந்துவரும் நம் சுவாமியின் பங்கயப் பாதம்
  • கூடி வரும் கூட்டத்தைத் தெய்வீகக் குரலால்
  • கானம் பாடி மயக்கும் சுவாமியின் சுகந்தப்பாதம்
  • பாடி வரும் பக்தர்களின் கூட்டத்தைக் கண்டுகளித்து
  • மகிழும் சுவாமியின் சுகிர்த சுகுணப்பாதம்
  • காணக் கண் கோடிவேண்டும் வேண்டும்
  • ஸ்ரீ சத்ய சாயிநாதனுக்குச் சுபமங்களம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0