உன் பதம் தானே
- சிவமேயெங்களகமே சனாதன சாரதியே
- சனாதனப் பெருந்தவப்பயனே
- செகமே உன்னிலதிலுரையும் உயிர்களினுயர்வே ஆதியே,
- பிறைசூடிய திருவே கங்கைகொண்ட அருளே அன்பே
- அமரபனீஸ்வர ஆனந்தச் சோதியே !
- அருவுருவே உனைத் தொழுதே வணங்கிடத்தான்
- வாழ்வியலின் வசந்தம் துலங்குமே
- வானமும் பூமியுமான வுன்அன்பினுக்கேது எல்லை
- அகிலத்தை யருள்வெள்ளத்தில் நனைக்குமே
- வுன்னருட் கருணை மழையே
- ஸ்ரீ சாயீஸ்வர சிவமேயென் சீவனில் நீ யிருந்துன்
- வழிநடந்திட நீயே நடத்திட, அருள்தர வரவேண்டும்
- மதம்கொண்ட மனத்தினையடக்கு
- முன்பதம்தானே நிதம் நிசமாம்
- நித்ய சாஸ்வத நிர்மல சத்தியமாமது
- உன் சர்வ பரப்பிரும்மமாம் சத்தியமேஅத் தர்மமாம்
- உன் மலரடி தொழுதிட உன்பதம் நீ தந்திட
- ஆத்மாவும் சுகம்பெறுமாம், அதுவே உன் சரணாகதமாம்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்