தீப லக்ஷ்மியாய்
- பர்வதவர்த்தினி, ஏலவார்குழலி, நீள்நெடுங்கண்ணி,
- அலர்மேல் மங்கை, மங்களாம்பிகை, சாரதா,
- சாம்பவி, சங்கரி, பார்வதி,
- குழல் மொழி வாய் அம்மை யெனச்
- சத்திய சாயி தேவிக்குத்தான்
- எத்தனையோ நாமங்களணி வகுக்கும்
- உன் நாமஸ்மரணையில் தானத்தனை நலன்களும்
- நன்மைகளாய் நலம் பயக்கும்
- உயிரில் கலந்து ஆத்மாவியக்கு முன் வியாபகம் கண்டே
- கார்த்திகைத் தீப அஷ்டலக்ஷ்மிகளாய் அருள்தர வரவேண்டும்
- காசி விசாலாட்சி அன்னபூரணி பத்மாவதித் தாயாராய்
- சாயீஸ்வரியே பிரசாந்தி வாசினி ஸ்ரீ சத்ய சாயி
- தேவிமாதாவே உனக்கு ஆத்ம வந்தனம்
- உன் ஆனந்த சாகர அன்பு மதம் இனம் மொழியாம்
- சங்கமத்திருவடிகளில் சங்கமிக்கும் அனைத்து
- பக்த நதிகளுக்கும் உனதருட்கருணையால்
- அரவனைத்துன் அபயஹஸ்தத்தில்
- அருளாசி வழங்கிட வருவாயே ஸ்ரீ சத்ய சாயிமா
- நீயே சரணகதம் தாயே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்