வெண்ணெயுண்ட அழகினை
- ஆயர்பாடியிலுன் வேய்ங்குழல் ஒலிக்கும்
 - கோவர்த்தன கிரியிலுன் வேணுகானம் இசைக்கும்
 - பிருந்தாவனத்தில் உன் மோகனகானம் அழைக்கும்
 - மதுராபுரியிலுன் மதுரக்குழலோசை மயக்கும்
 
- யமுனா தீரத்திலுன் சாகசம், விளையாட்டு,
 - குறும்புத்தனம், வியக்க வைக்கும்
 - பிருந்தாவன நந்தவனத்திலுன் ராசக் கிரீடையும் ஆனந்திக்கும்
 - உன் காளிங்க நர்த்தனத்தில் கலைநயம் மிளிறும்
 
- பூதனை சம்ஹாரம் பூமி வானம் வரை வியாபித்திருக்கும்
 - குசேலருக்கருளிய உன் நட்பின் இலக்கணத்தைச்
 - சரித்திரம் ரசிக்கும், லயிக்கும், அவல் படைத்து மகிழும்
 - நீ வெண்ணையுண்ட அழகினை, அழகுதனை ஆயர்பாடியின்
 - அனைத்துக்கண்களும் கண்டு மகிழ்ந்திருக்கும்
 
- கோவர்த்தனகிரியை நீ குடையாய்ப் பிடித்ததில்
 - பசுக்கூட்டங்களும் பரவசமானதே
 - கம்சவதத்தில் அம்சவர்த்தனன்
 - உன் தசாவதாரமும் உணர்ந்ததே
 
- யசோதையிடம் நீ வளர்ந்த புனிதப்பாசம் பர்த்தியில் சுப்பம்மா
 - அம்மாவிடமும் புரிந்து தெரிந்ததே, வியந்ததே
 - பர்த்தியிலுன் சாயிநாமம் மனதினில் மயக்கும்
 - வியக்கும் இசைக்கும் லயிக்கும்
 - வியாபிக்கும் பிரவாகித்துப் பிரயோகித்து
 - இவ்வுலகிற்கே நன்மை பயக்கும்.
 - அனைத்தும் சாயி மயமாக்கும்.
 
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
  
  Help Desk Number: