ஆடிவெள்ளியில்

  • ஆடி வெள்ளம் பெருக்கெடுத்து வருவது கண்ணிற்கு அழகு
  • உன்னைத் தேடி வரும் பக்தர் மனம் உன் அன்புக்கு அழகு
  • நாடி வந்து நலம் நல்கும் உன் கருணையே பெரிது
  • ஓடி வந்து ஓம்காரமாய் ஒலிக்கும் உன் அருள் வடிவம் அரிது
  • பஜன்கள் பாடி வந்துன், பன்னாட்டுப் பன்முகப் பக்தர் மகிழும்
  • ஆனந்தம் அழகுக்கு அழகு
  • கோடி சென்மம் தொடர்ந்த, தொடர்ந்து, வருமுன் கருணைச்
  • சாந்நித்தியம் அழகோ அழகு
  • மனதில் நிலைபெற்றிருக்கும் உன் திருவடித் தாமரைகள்
  • பவக்கடலைக் கடக்க உதவும் மரக்கலம், மனக்களம்
  • மகிமைத்தலம், மஹாத்மிய வலம்
  • அக்னிக் காட்டினை அழிக்கவல்ல அக்னி ஜுவாலை
  • நவரத்தின ஆபரணங்கள் அணிந்த சாயிமா தேவியின்
  • திருப்பாதங்கள்தான் தூண்டாமணி விளக்கு
  • சாயி அபிராமி, சங்கரி, புவனேஸ்வரித்தாயே அனைவருக்கும்
  • சகல சௌபாக்கியம் அளிக்க ஆடி வெள்ளியில்
  • பூரணத்துவப் பௌர்ணமியாய் சாயி
  • காயத்திரித்தாயே ஆனந்தமாய் வருவாயே
  • ஆடிவெள்ளி கூடி வந்துன் பண்களிசைத்துச்
  • சத்சங்கத்தில் திளைத்துன் சேவைகளில்
  • ஆத்மானந்தமடைந்திட அருள்புரிவாயே
  • அங்காள அம்மையாக சாயீஸ்வரித்தாயே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0