பக்த நதிகள்
- கார்த்திகை தீபச்சுடர் ஒளியில் அருணைமலை யிலழகாயுனது
- ஸ்ரீ சத்யசாயி சிவமென்ற அருட்கருணை தெரியும்
- ஸ்ரீராமன் வடிவத்தில் உன்னைத் தொழும்
- அடியவர்க்குச் சரயுவின் அயோத்தியாய் பிரேமையும்
- அழகழகாய்த் தெரியும்
- ஸ்ரீ சாயி கிருஷ்ண ரூபத்தில் உன்னைப் பணியும் பக்தர்க்கு
- யமுனா நதி தீர வேணுகானம் உன்குழலிசையில் ஒலிக்கும்
- கங்கைக் கரைதனில் சாயி சிவமே காசி விஸ்வேஸ்வரனாயுன்
- வியாபகம் புரியும், விந்தையாய் அருளும்
- சித்திராவதி தீரத்தில் உன் அற்புதங்களும் மகிமைகளும்
- லீலாவினோதங்களுமுன் அவதாரமகிமைகளை உணரும்
- ஸ்ரீ சாயி முருகனாய்ச் சரவணப்பொய்கையில்
- உன் சாந்நித்தியம் மலரும், வளரும்
- இவ்வுலகில் உள்ள புண்ணிய நதிகள் சங்கமக்கடலிலும்
- உன் பவித்திரக் கருணையே குளிர வைக்கும்
- இப்போது மெப்போதுமுன் சங்கமத் திருவடிகளில்
- சரணாகதியடைய அருள்வாயுன் பக்த நதிகளுக்கே
- விதி வலியதாயினும் கதி நீயே சரணாகதியாய்
- மதியுணர்ந்து மனச்சொல் நீக்கி வாழ்வியல் வாழ்ந்திடப்
- பதியுன் சங்கமத் திருவடிகளில் சமர்ப்பித்துச் சேவைகள்
- பற்பல செய்துன் மலர்த் திருவடிகளுக்கு
- அர்ப்பணம் செய்விக்க அருள்வாய் ஈசா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்