குழலோசையில்
- மதுர கானக் குழலோசை மதுரா நகர்தனில் ஒலிக்கின்றது
- உன் தேமதுரப் பண்ணோசை பிருந்தாவனிலே கேட்கிறது
- வேணு கான இசை தனிலே ஆநிரைகள் மயங்கும்
- நவநீத கண்ணன் உனைக் கண்டு கோக்கூட்டம் மகிழும்
- ஆயர்பாடி கூடி நின்று ஆனந்தமாய் ஆடும்
- ஆவினங்கள் அமுதத்தினை அழகுடன்தான் சொரியும்
- மா மழையும் மகிழ்வுடனே சாரல் மழை பொழியும்
- பூந்தோட்ட நந்தவனம் புதுப்புது மலர்கள் பூத்தே
- சுகந்தமாய் நறுமணங்கள் மணக்கும்
- யமுனையின் தீரம் எல்லாம் கண்ணன் பாதம் பதியும்
- கோவர்த்தன கிரியெல்லாம் மாயவன் வேதம் பதியும்
- முகம் மலர்ந்து நீயும் புன்னகையுடன் புதுமலராய் வருவாய்
- முன்னுரையாய் முகமன் கூறி
- உன் பதமலர் தொழ வரம் தருவாய்
- காளிங்க நர்த்தனத்தின் பொருள் உலகில் புரியும் – உன்
- கானக்குழலிசையும் வானம் பூமி வரை பரவும்
- பாரிஜாதப் பக்தர் கூட்டம் பாரெல்லாம் குவியும்
- சாயி கிருஷ்ணன் நாமஸ்மரணை நாள்தோறும் ஒலிக்கும்
- பாபா உன் அருட் கருணை மழையும்,
- அன்பு மனதில் பொழியும், ஆனந்தக் கண்ணீர் வழியும்
- சாயி கண்ணன் நாமஜெயம் நாள்தோறும் பெருகும்
- ஆநிரைகள் ஆனந்தமாய்க் கன்றுகளுக்குப் பால் பொழியும்
- அகம் நிறைந்து அகிலமெல்லாம் ஆனந்த நடனமாடும் – உன்
- முகம் மலர்ந்தெங்கள் அகமெல்லாம் ஆனந்தக் கூத்தாடும்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்