தழைக்கச் செய்வாய்

  • பர்த்தி சாயீஸ்வரி, அங்காள பரமேஸ்வரி
  • அன்னபூரணி, அங்கயற்கண்ணி, மாரி, காளி,
  • அம்பிகையாம் அபிராமியை, சங்கரி, சாமுண்டி, சாவித்ரி,
  • சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, விஷ்ணு மாயா, பகவதி,
  • பரமேஸ்வரி, விசாலாட்சி, சாயிதேவிக்கு, ஆடிக்கிருத்திகை
  • ஆடிச்செவ்வாயில் ஆனந்தமாய் மாவிளக்குப்படையலிட்டு
  • மங்கலமாய்த் துதித்திடுவோம்
  • சாயி மாதா உன்னருளால்தான் அசையும் அசையாப்
  • பொருட்கள் இப்பூவுலகில் சிருஷ்டிக்கப்படுகிறது
  • உன் கருணையால் மானிடர்க்கு முக்தி அளித்து அருள்கிறாய்
  • மல்லிகை முல்லையாம் பலப்பல வண்ணமலர்கள் சூட்டிப்
  • பட்டுச்சாற்றி மங்கலக் குங்குமம் இட்டு மங்கையர்
  • திருமாங்கல்யமும், சந்ததிகள் தழைத்தும் சாந்நித்தியமும்
  • பெற அருள்வாயே ஸ்ரீ சத்திய சாயி மாதா உனக்கு
  • அனந்த கோடி ஆத்மார்த்த வந்தனங்கள் தாயே சாயிமா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0