சடுதியில் வருகவே
- சாயி சிவமே சுவாமி உன்னைச் சிந்தித்தால்
- உன்னைச் சந்தித்த உள்ளங்களில் புதுப்புது
- அனுபவ உதயங்கள் உருவாகி உனதன்புக் கருணைக்
- கொடைகள், மகிமைகள், அற்புத லீலைகளை, ஆனந்தமாய்
- வியந்து அழகாய், உதித்து உயிர்ப்புடன் உதிர்க்கும்
- உனை நிந்தித் தோருமுனக்கு, வந்தனை செய்கின்ற மாயமும்
- உன் அருளால் தானே
- இதயக்குடவரைக் கோயிலில் வைத்து உன்னைத் துதித்து
- வரும் பக்தஅன்பர்கள் எண்ணிலடங்காச் சொல்லில்
- அடங்காக் கணக்கிலடங்காக் கணக்கியல்தான்
- சாயி சிவமே நீ சிவசக்தி ரூபமாய்
- அச்சக்தியின் பாலகராம் கந்தனாய்க், கணபதியாய்,
- சன்மதப்பக்தர்க்கும் சாந்நித்யமளித்திடச் சடுதியில்
- வந்தே காத்தருள்வாயே
- முத்தேவியராய் முழுமதிபோல் வந்து பூரணத்துவமளிப்பாய்
- சித்தேஸ்வர ஸ்ரீ சைலபுரீசனே மனிதத்தில் மலர்வாயே
- பன்மதப்பக்தருக்கும் அவரவர் தெய்வமாய்க் காட்சி தந்து
- கருணை செய்யும் சாயி சிவமே, தவமே எப்பெயரில்
- அழைத்தாலும் எப்போதும் வந்து காத்தருளும் பரப்பிரும்மன்
- உன் பாதாரவிந்தங்களுக்கு அனந்தகோடி
- ஆனந்த வந்தனங்கள் சரணம் சரணம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்