சரணாகதியே சரணம்
- செய்வதும் செய்விப்பதும் செயலுமதுவே
- உன் ஆத்ம தத்துவம் சுவாமி
- குமரக் கடவுளின் வள்ளியாய்க், கண்ணனின் ராதையாய்,
- இறைவனில் பாதி இறைவி உமையம்மையாய்,
- மாலின் மஹாலஹ்மியாய்,
- பிரம்ம சரஸ்வதிதேவியாய்,
- நவசக்திகள் அனைத்தும் ஆன ஆதி சக்தியாய்,
- மங்கலங்கள் தந்திட மகிமைகள் புரிந்திட
- மானசீகமாய் வரவேண்டும்
- மானஸா தேவியே சிவசக்தி ஸ்வரூபிணி சாயிதேவியே
- வெள்ளியில் வேள்வியாய் வந்தே ஆசிகள்
- நல்குவாய் தாயே
- உன் செந்தாமரைப் பொற் பாத
- கமலங்களுக்கு ஆத்ம வந்தனம்
- வருக, தருக, கருணை பொழிக
- வெள்ளிமலை மன்னவனின் சத்திய அரசியே சத்தியசாயி
- ஈஸ்வரியே உன் சங்கமத் திருவடிகளில்
- தங்க இடம் தரவேண்டும்
- மங்களம் பொங்க வேண்டும்
- வாழ்வியல் சிறக்க வேண்டும்
- உன் சேவைப் பணிகள் ஆற்றிப் பிறவிப்பயன்
- அடைய வேண்டும்.
- உன் சரணாகதியே சரணம்
- ஸ்ரீ சத்யசாயி தேவியே போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்