கருணை வரமளிக்க
- பூங்கமலமுன் வதனம் பொழிந்திடுமுன் அன்பைக்
- கருணை நயனப் பார்வையில்
- கற்பனைக்கெட்டா வுன்னருள் அற்புத மகிமைகளைக்
- காணக் கண்கோடி வேண்டும்
- செவிகுளிரக் கேட்டிட நற்பவியுமே உன்
- சங்கல்பமாய் வேண்டும்
- நாவின் இனிமையா யுன்நாமஸ்மரணை பஜன்பண்கள்
- பாடி மனங்குளிர வேண்டும்
- கண் மூடி ஜப தபதியானங்களி லுன்னெழில்
- தரிசனங் காணவேண்டும்
- உனை நினைந்தாலே நெக்குருகிக் கண்களில்
- நீர் சோர வேண்டும்
- ஆனந்தக் கண்ணீராலுன் செங்கமல மலர்ப்பாதம்
- தொழுதிடல் வேண்டும்
- முப்போதும் எப்போதுமுன் நினைவு நீங்காமலுனை
- யெண்ணித் துதித்தல் போதும்
- அகமதில் இச்செகமதில் வாழும் வரையிலுன்
- அன்புக் கருணை வரம் தயை வேண்டும்
- கண்ணிமைகளாய்க் காக்கின்றாய், கரம் சேர்க்கின்றாய்
- கடவுளுனையே உணர வைத்தாய்
- உள்ளுணர்விலூடுறுவியுன் சத்தியப் பாதைதனில்
- நடக்க வைத்தாய்,
- நீ இருக்கக் குறையேதுமில்லைதான் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்