புகலிடம்

  • சாயி ராம நாமம் தன்னை நாள் முழுக்கப் பாடுவோம்
  • தாயுமாகி வந்து தந்த கருணை தன்னை
  • எண்ணி மகிழுவோம்
  • தாயுமான சிவமாயுன்தாள் பணிந்துதான் வணங்குவோம்
  • தந்தையும்தான் நீயென்றே எங்கள் சிரம்
  • தாழ்த்தியுனைத் தொழுதிடுவோம்
  • உன் சரணம் அஷ்டசக்திகளின் புகலிடம்
  • உன்னவதாரப் பர்த்தியே மொத்த உலகின் புகழிடம்
  • உன் அன்பின் மொழியே சனாதனக் கலைநயமுன் மயம்
  • அனைத்து உலகிலும் இஷ்டமாயுனைத் துதிப்போர்தம்
  • கஷ்டமே நடந்தும், கடந்தும், போகுமே
  • இகபரசுகமதில்தான் இன்பம் வந்து சூழுமே
  • ஆகமங்களின் வேள்வியாய் ஆயகலைகளின் ஆட்சியாய்
  • உனது சிருஷ்டியா யருந்தமிழின் இனிய நல்மொழி
  • யாமழகாய் இவ்வுலகை ஆட்டுவிக்கும்
  • நாயகனே பரப்பிரும்மமே பஞ்சாட்சரமே உன் பங்கய
  • மலரடி பணிந்திடவே வணங்கிடத்தான் வருகவே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0