தமிழ்ப் புத்தாண்டில்
- இன்ப துன்பம் எவ்விதத்தில் எவ்வழி வந்தாலென்ன சுவாமி
- இறைவன் உன் துணையிருக்கையிலே
- உன் மலர்ப்பதமிருக் கையிலே
- விகிதாச்சாரங்கள் வர, தர,
- வைப்பதுன் செயலன்றோ!
- சுவாமி நாங்கள் உங்கள் மேல் அன்பு
- கொண்டிருக்கிறோமென
- எங்களிதயத்திலுணர முடிகிறது.
- நீங்கள் எங்கள் மேலன்புகொண்டிருப்பதைத்
- தெரிந்துகொள்வதெவ்வாறு? என்று வினவிய
- பக்தருக்குக் கருணையுடன் உன்னுடைய
- இதயத்திலென்மேல் தோன்றுமன்பே நான்
- உன் மேல்கொண்டுள்ள அன்பின் அடையாளமாகும்
- ‘நானன்பு கொள்ளாத எவருமே என் மேலன்பு
- கொள்ள இயலா தெனக்கூறிய’
- விளக்கந்தான் வாழ்வில் மறக்குமா சுவாமி
- இன்பதுன்ப விகிதத்தை நீ சிவசக்தி சொரூபமாய்
- வந்தே காத்தருள்வாயே
- அல்லன வரினதனைத் தாங்கிடத்தான் உரிய சக்தி
- தந்துன்னளப்பரிய பெருங்கருணை மழையயைப்
- பொழிவாய் சுவாமி சாயீஸ்வரா
- வரும் தமிழ்ப்புத்தாண்டு புதுப்பொலிவை
- அருட்பொழிவைத் தரவேண்டும்
- உயிர்கள் உவப்புற வேண்டும்
- பயிர்கள் செழித்து ஓங்கி வளர வேண்டும்
- உலகில் சமாதானம் பெருகி அமைதி அன்பு
- சனாதனம் சாந்நித்தியம் சத்தியம் தர்மம் பிரசாந்தி
- பிரேமை அகிம்சை மனிதம் வளரவேண்டும்.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்