‘செவ்வாய்’ க்கிழமைதனில்
- செப்பும் வார்த்தையும் செய்யும் தொழிலும்
- உனையன்றி யாது?
- உன் செங்கமலப் பதமலர் தரிசனத்தில்தான்
- என்றும் துன்பமென்ப தேது?
- செங்கோட்டீசனின் பாதி நீ செங்கோலொச்சும்
- ஆதிசக்தி மலையரசி நீ
- மங்களம் நல்கியே சிம்மாசனமதில் வீற்றிருக்கும்
- மஞ்சுள நாயகியே ஸ்ரீ சத்திய சாயீஸ்வரியே
- உன் மலரடி போற்றி போற்றி
- உன் செவ்வாயில் வரமளிக்க செவ்வாயிந் நாளில்
- வருக அருளே தருக. கருணை பொழிக.
- சிவசக்தி ஸ்வரூபிணியாய், பர்த்தீஸ்வரியாய்
- உன் பதமலர் பணிந்து தொழத்தருகவே, அருள்கவே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்