அருள்மழை

  • அருள் மழை பொழிந்திடவே சாயி அவதாரம் ஆகி வந்தாய்
  • அவனிதனைக் காத்திடத் தான் பவதாரம் ஆகி நின்றாய்
  • இருள்தன்னை நீக்கி இரு வினைகள் போக்கி இன்ப வாழ்வு
  • அளித்து விட்டாய்
  • மருள் விலக்கி ஆன்மீக சனாதன தர்மத்தில் அழகுடனே
  • அமரவைத்தாய்
  • வில்லினை வளைத்திட்டே வினைதனையறுத்து விட்டாய்
  • வேய்ங்குழலூதி வேற்றுமையைக் களைந்திட்டாய்
  • பல்வினை சூழ்ந்திடினுமுன் ‘சாய்ராம்’ எனும்
  • மந்திரச் சொல் காத்து நிற்கும்
  • நல்வினையளித்து நற்பவி தந்து உள்ளமதில் நீ
  • சோதியாய் நிலைத்துவிட்டாய்
  • குரு ஸ்ரீ சத்யசாயிக்கு உள்ளமதில் கும்பாபிஷேகம்
  • செய்கின்றோம்
  • ஸ்ரீ சத்திய சாயிநாதன் உனக்கு உள்ளக்கோயிலில்
  • சிம்மாசனமளித்துக் கருவறையில் தொழுகின்றோம்
  • மண்டலாபிஷேகங்களாய்ச் சேவைகளாற்றித்
  • தொடர்கின்றோம்
  • பரப்ரம்மம் சாயிநாதனுக்கு நல் மந்திரங்கள்
  • கோடிகோடியாய் அர்ச்சிக்கின்றோம்
  • மாதா பிதா குரு தெய்வம் சகாவான
  • ஸ்ரீ சத்ய சாயி நாதனுனக்கு வந்தனம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0