நல்லன மட்டும்

  • பலவண்ணப்பூக்கள், பறவைகள்போல்-உன்
  • பன்னாட்டுப் பன்முகப் பக்தர்கள் கூட்டம்
  • பலப்பல எண்ணம் வண்ணங்களுடனுன்
  • சன்னிதி வலம் வரும், குலம் காக்கும்
  • சில உடன் ஆகும். சில கால தாமதமாகுமுன்சங்கல்பத்தில்
  • நல்லன மட்டுமுன் சாந்நித்யத்தில் நற்பவி ஆகும், நலமாய்ச்
  • சங்கடங்கள் தீரும், தீர்க்கும்.
  • சாபங்கள் கோபதாபங்கள் மறையும்
  • தீவினைகளகலும் திருப்புமுனையுணரும்
  • மும்மலங்கள் போகும், முக்கண்ணன் உன்னருள்தான்
  • பெருகும், நிம்மதி வளரும், உன் சந்நிதி வணங்கும்,
  • உனது சாந்நித்யம் பெருகும்
  • இம்மை மறுமை இகபர வாழ்வில்
  • இடர்துயர் நீங்கி இனியவை மல்கும்
  • இனிய அன்பு சாயினருட்கருணை அபயஹஸ்தமளிக்கும்
  • உன் திருவடி மலர்களுக்கு ஆனந்த வந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0