பால் அபிஷேகம்

  • பிரேமை என்னும் குடம் நிறையப்பால் அபிஷேகம் செய்தால்
  • பார்க்கடல் மீதினிலே துயில் கொண்ட நாராயணன்
  • நீ நற்பவி நல்கிடுவாய்
  • சத்தியம் என்னும் அமுதெடுத்து அழகுடன் உனை
  • அபிஷேகித்தால் தர்மப் பாதைதனிலுன்
  • கருணை வரும்சந்ததிகளை வாழ்த்தி வரமளிக்கும்
  • சாந்தியும் தவமாய் வந்துன் சரணாகதியில் சங்கமிக்கும்
  • அகிம்சைப் பாதையில் உலகில் சமாதானம் மலரும்
  • சாத்வீகம் ஒளிரும்
  • அரிஅரனுனைத் தொழுது அகிலமுன்னன்பருளில் திளைக்கும்
  • பிரசாந்திக் கருவறைத் தெய்வமே ஸ்ரீ சத்திய சாயீசா
  • பிரவாகமாயுன் அருட்கருணை அன்பு வெள்ளம்
  • அனைத்து உயிர்களுக்கும் கிட்டி பரப்பிரம்மம்
  • உன் மலரடி தொழுதுய்ய வேண்டும். சரணம் சரணம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0