பலம் தருகவே
- சீர்மிகு பர்த்தியின் சிறப்புன் மகத்துவ மகிமைத்துவமே பாபா
- பாரெலாம் பக்தர்களின் பரவசப் பரிபூரணமே
- சரணம் சாயிநாதா
- அதில் சேர்வினையகற்றி அல்லனசேரா வண்ணமாய்த்
- திண்ணமாய் ஆட்கொள்வதுன் கருணை தானே ஈசனே
- சோரும் மனதிலும் தீர்விலா நிகழ்விலும் சோம்பல்
- துயர்தனிலும் சேர்ந்து வந்து காத்தருள்வதுன்னருட்
- கடாட்சமே சாயீசா
- இம்மை மறுமை இகபரசுகம திலிறுதிவரையிலுமே
- உனது துணை தவிரவேறேது சுவாமி
- அருகிலும் சுற்றிலுமகிலமனைத்திலும் அருவமாய் உள்ளாய்
- இறங்கி, இரங்கியேதானே, நீ தானாய், வருகிறாய்
- தயை செய்கிறாய், தாயாய்த் தெரிகிறாய்
- முந்தை முன்னையாய் எந்தை தந்தை குரு தெய்வமாய்ச்
- சகாவுமாய் சகலமும் சர்வமுமாகிறாய்
- என்று மெங்கு மெதிலுமுயிருணர்வா யுள்ளாய்
- பஞ்சபூத வளிவெளிமண்டலத்தில் சாஸ்வத சாந்நித்திய
- மான சத்தியமாய்ச் சங்கல்பிக்கிறாய்
- ஸ்ரீ சத்திய சாயீஸ்வரா. திங்களே எங்களின் இதய உதய
- ரத்னாகரகுலச் சூரியனே சர்வேசா
- தரிசனம் தரக்கரிசனமாய் வருக உன் ஸ்பரிசன
- நயன தரிசன வரம் தருக, பலம், பலன், பயன் தருக.
- அபயஹஸ்த அருளாசியுடனுன் பதமலர் தரிசனம் தருகவே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: