தீபத்திரு ஒளியில்
- நீர் நிலம் காற்று வெப்பம் ஆகாயம் எனப்
 - பஞ்சபூதத்தில் நிறைந்திருக்கிறாய்
 - நெருப்பினிலே புற, அக, இருளைப் போக்கியே
 - ஞானம் நல்குகிறாய்
 
- தீபத்திருவொளியினில் ஸ்ரீ சத்யசாயிசரஸ்வதி தேவியாய்
 - அதன் வெப்பத்திலே ஸ்ரீ சாயி இலக்குமி தேவி
 - யாயதன் நற்சுடரினில் உமையம்மைதேவியா யுனை
 - நவராத்திரித் திருநாளில் நாடு நலம் பெற வீடு
 - சுபிட்சம் பெறவுனதருட் கடாட்சம் தந்தே
 - அருள்புரியவரவேண்டுமென ஸ்ரீ சத்திய சாயி
 - சிவசக்தி சாயிமாவென முத்தேவியராய்
 - நவசக்தி நவநிதி நவமணிகளாய் நவராத்திரி
 - நாயகியாய்த் துதிக்கிறோம்
 
- தினம் வரும் நாளெல்லாம் உனைத் துதிக்கும்
 - நற்பவி நாள் தானே
 - உனைத்தொழா நாளெல்லாம் உன்கருணை
 - பெறா வீண் நாள் தானே
 
- ஆயினும் உன்அன்புக் கருணையைத் தாயாய்
 - சாலப்பரிந்து தயை செய்து வருகிறாய்
 - மகாசிவராத்திரியின் ஆத்மலிங்கமே உன் கமலப்
 - பாதாரவிந்தங்களுக்கு அனந்தகோடி
 - ஆத்மார்த்த சரணாகதி சாயிமா.
 
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
  
  Help Desk Number: