மனம், மெய், மொழியாலுனை
- மனம் மெய் மொழியாலுனைத் தொழுது
- வாழ்ந்திட அருள் தரவேண்டும் சாயீசா
- பிறர் குறை நீக்கிக் குற்றங்கள் களைந்தே மன்னித்தருளும்
- குணம் வேண்டவுன் னருட்கருணை வேண்டும் சாயீசா
- மனமதில் நீ வீற்றிருந்து மக்கள் சேவையாற்றிடவே
- எப்போது முறுதுணையாய் நீ வரவேண்டும் சாயீசா
- கிட்டற்கரிய இம்மானிடப் பிறவியில் மனிதம் காத்து வாழ்ந்திட
- சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சை வழியில் நடந்திட
- உளமுருகி யுன்னடி தொழுதடி பணிந்துயிர்த்து
- வாழ்ந்தால் போதும் சாயீசா
- துயிலென்பதேது உனக்கு பக்தர்தமை இமையாய்க்
- காத்தருள்வதுதானே உன் யோக நித்திரைத்வம்
- முப்போது முன்னடியவரைக் காத்தலே உன்கருணைத்வம்
- அது உன் அன்பின் அழகான, அதிசய, ஆச்சர்ய முத்திரைத்வம்
- கருவறைத் தெய்வமாய் நீ அருள்பாலிக்கும் புனிதப் பர்த்தியே
- கயிலை அது ஸ்ரீ சத்யசாயித்வம்
- மகாமகம் சாயி மகாத்மியம்
- ஸ்ரீ சத்ய சாயீஸ்வர சிவமே வருக அருள் தருக நலம் நல்க.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: