புத்தம் புதுப் புதினம்
- அவரவர்க்குப் பிடித்த புத்தம் புதுப் புதினம்
- படிக்க ஆனந்தம் கிட்டும்
- எல்லோருக்கும் பிடித்த உன் மந்தகாச வதனமதைத்
- தரிசிக்க ஆத்மார்த்தம் உயிரில் எட்டும்
- உண்டவருக்கு உன் நாராயண சேவைப்
- பிரசாதம் அமுதத்தை ஒக்கும்
- வானவர்களுக்கும் பசியாற்றி
- ஆகர்ஷணத்தையே அளிக்கும்
- தேவர், ரிஷிபுங்கவர், முனிவர்களுக்கு
- வாத்சல்யத்தையும் நல்கும்
- அன்னமும் நீ, அன்னபூரணியும் நீ
- அஷ்டலக்ஷ்மியும் நீ யன்றோ
- ஆதிகடவூர் அபிராமி அன்னையும், ஆயிரமாயிரம்
- அன்னையினன்பும், உன்கருணையன்றோ
- பண்பாடித்துதித்திடவும் உன்னன்பு
- அருளுக்கு எல்லையில்லை
- விண்முட்டும் வரையிலுமுன் லீலா வினோதங்களுக்கு
- எண்ணிக்கையில்லை
- உன்சேவையாற்றிட்ட பக்தர்களுக்கு வாழ்வியலில்
- ஏதும் பஞ்சமில்லை
- கல்லில் தேரைக்கும் கருவறைக் குழவிக்கும்
- உன்னருள் தவிர வேறு தஞ்சமில்லை
- உனையேற்றிட்ட அன்பர் நெஞ்சில் வஞ்சமில்லை
- துஞ்சலிலும் துயரிலும்கூடத் துணையிருக்கும் தெய்வம்
- நீதானென்றுனை நம்பித்தொழுவோர்க்குத்
- தும்பிக்கையோனாயும் வந்தே வினைகளைவாய்
- பிரசாந்தி சாயிகணேசனாய்
- வியாழனிலும் வியாழனாய் வந்து நற்பவியாய்
- விடியல் தர வேண்டும் ஸ்ரீ சத்ய சாயிநாதா சரணாகதி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: