தேன் பாகும் திகட்டிவிடும்
- தித்திக்கும் தேன் பாகுந்திகட்டிவிடு மதிகமாயின்
- எத்திக்கும் தானாய்ப் பாயும் புகட்டிவிடு மமுதமாயுமுனை
- நிந்தித்த மனங்கூடச் சிந்தித்துன்னில் மாற்றங்கொள்ளும்
- அது துள்ளித்திரிந்துன் அன்புக் கடலில் சங்கமமாகும்
- அள்ளித்தருமுன்னருட் கருணைதனில் அங்கம் வகிக்கும்
- பள்ளித்தலமனைத்தும் கோவில்செய்தே காவலாயிருக்கிறாய்
- பற்பல சேவைப் பணிகளைச் செய்திடச் சங்கல்பமளிக்கிறாய்
- கீதைப்பாதைதனில் நடந்திடவே
- நற்பாதை வகுத்துத் தருகிறாய்
- சொற்சுவையும் பொருட்சுவையுமுன்
- அன்பு அருட்சுவையில் சேர்த்தளித்து
- அறவாழ்வில் வாழ்வியல் வாழ வைக்கிறாய்
- சத்யம், தர்மம், சாந்தி, பிரேமையில் மனிதம் மலரச் சந்தர்ப்பம்
- தந்து சனாதனத்திலுரு வேற்றுகிறாய்
- ஆத்ம நிவேதனமாய் ஆன்மீகப்பாதை
- வழிநடத்தி ஆன்மாவை அரங்கேற்றுகிறாய்
- நாராயண சேவைகளைச் சாயிநாராயணனுன்
- வேதபாராயணமென்பதை உணரச் செய்கிறாய்
- மாதா பிதா குரு தெய்வச் சகாவாய் பற்பல அற்புத லீலைகள்
- புரிந்துன் பக்தர்களுக் கருள்பாலித்து வருகிறாய்
- பர்த்தியை நோக்கியுன்னருட் பயணமாய்ப்
- பயணிக்க வைக்கிறாயவர்களில் நீயும்கலந்தாட்
- கொள்கிறாயதி லாட்சியும் செய்கிறாய்
- அதியற்புதக்காட்சியும் தந்து மாட்சியளிக்கிறாய்
- நற்பவி நல்கி இருவினைகளகற்றி மீட்சியை
- தருகிறாயதில் சாட்சியாய்த் தெரிகிறாய்
- ‘நானிருக்கப்பயமேன்’ என்றுன் மலரடி தொழவும்
- அபயஹஸ்தமளிக்கிறாயன்புக் கருணையால்
- சத்தியசாயி நாதனுன் சங்கமக் கடலில் பன்மதப்
- பக்த நதிகள் சங்கமிக்கச் செய்கிறாய்
- அது சாயிமா உனது தாயன்புதானே, தயை செய்யும் தானே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: