உள்ளமதில் நீயிருந்து

  • உள்ளமதில் நீ இருந் துயிர்ப்பிக்கிறாய் சாயி
  • சாயி கள்ளமற்ற மனங்களில்தானே நிலைத்திருக்கிறாய்
  • வெள்ளமாம் துயர்வரினுமதைத் தூர விலக்கி வைக்கிறாய்
  • தெள்ளமுதாய்ச் சிந்தைதனில் நீ நிறைந்திருக்கிறாய்
  • புத்தம் புதுப்பூவாய்ப் பொய்கையில் பூத்திருக்கிறாய்
  • நித்தம் புதுப்புதினமாய்ப் புதிராய்ப்
  • புதிதாய் வாசிக்க வைக்கிறாய்
  • சாயி சுகந்தத்தைச் சுவாசிக்க வைக்கிறாய்
  • சத்தமின்றிப் பக்தர்களின் குறைகள் தீர்த்து வைக்கிறாய்
  • ஸ்ரீ சத்திய சாயி தெய்வ மென்ற
  • பெயரில்தான் உலா வருகிறாய்
  • அந்நிலாவிலும் காட்சிதந்து களிக்கச்செய்கிறாய்
  • கோடிகோடி பக்தர்களைப் பாரில் பரப்பிரும்மமாய்
  • உன்னில் சுமக்கிறாய்
  • சத்யம் தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையை
  • வாழ்வியலில் சமைக்கிறாய்
  • உனைத் தேடித்தேடி வருமன்பர்களை
  • அதிசய ஆச்சரிய வியப்பிலாழ்த்துகிறாய்
  • நாடி நாடி வந்தவர்க்கு நற்பவியாய் அபயமளிக்கிறாய்
  • ஓடியோடி வந்துன் திரு வடியில் சரணாகதியடைபவர்க்குன்
  • பொற்பாத கமலங்களில் அடைக்கலம்
  • தந்துன் சரணமளிக்கிறாய்
  • தன்னலமற்ற சேவைகளாற்றிடச் சொல்லித் தருகிறாய்
  • பாடிப் பாடி வரும் பக்தர்களின் பண்களுக்குன்
  • அருளைப் பரிசளிக்கிறாய்
  • அனைத் துயிர்களிலும் அன்பு செய்யென வுரைத்துன்
  • அன்புக்கருணை அன்பை அள்ளி அள்ளித் தருகிறாய்
  • தனி மனிதச் சுதந்திரத்தை உன் தயையாய்த் தருகின்றாய்
  • அதில் உள்ளிருந்துன்னு ணர்வி லியக்கி வைக்கிறாய்
  • ‘நீ வேறு நான் வேறு அல்ல’ என்றுரைக்கிறாய்
  • அது தெய்வத்திருவாக்கென் றுணர வைக்கிறாய்
  • வரலக்குமியாய் வந்து வரங்களனைத்தும் தந்தெமக்கு
  • வாழ்வியல் வசந்தம் தந்தே காப்பாய் திருவே
  • ஸ்ரீ சத்யசாயி வரலக்குமி சாயி சக்தியே போற்றி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0