கற்பகமே
- கற்பகமே உன் பொற்பதம் தன்னில் பணிந்திட
- இப்பிறவிப் பயனெய்தட்டும்
- அற்புதமே உன் ஆச்சரிய அதிசய மகிமைகளில்
- அழகாய்ப் படரட்டும்
- சொற்பதங்களுன் அருளுரை பொருளுரையிலே
- வாழ்வியல் வளம் நலமே சேரட்டும்
- சிற்சபேசனுன் சீர்மிகு சித்திகளில் மனம்
- சிருங்காரமாய்ச் சிறக்கட்டும்
- நற்பவியாய் நானிலமும் எண்திக்கும் துலங்கட்டும்
- ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபனே பர்த்தீஸ்வர சாயீசா, சர்வேசா
- சகலருக்கும் சாமானியருக்கும் உன் அருள்தான்
- கிட்டுமே அதிசயமாய் சாஸ்வதமாய்
- உன் பக்த நதிகள் உனது சங்கமக் கருணாகரக் கடல்
- தேடி ஓடி நாடி வந்து பாடிக் கலக்கும்தான் ஆனந்தமாய்
- பற்பல துன்ப துயரங்களை நீக்க, ஏன் இந்த வாழ்வென்று
- ஏங்கி உனை வேண்டித் துதிப்போர்க்கு நீ இரங்கி,
- இறங்கியே, வந்து ஆட்கொள்ளும்
- அருட்கொடைக்கு அளவுகோலேது சுவாமி
- நீ இருக்க உன் துணையிருக்கக் குறையேதும் இல்லை
- ஸ்ரீ சத்யசாயி மகேசா சர்வேசா
- உனக்கு அலங்கார ஆத்மப் புனித வந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்