நீயில்லாத இடமில்லை

  • பரப்பிரம்மம் இறங்கி வந்து இப்பாரினில் அவதரித்த நாள்
  • பரமே சிவமா யிவ்வகிலத்தில் வந்துதித்தநாள்
  • பரம்பொருளே சாயிராமனாக அருள் தர வந்த நாள்
  • பரஞ்சோதியாய் சிவசக்தி சொரூபனாய்க்
  • கருணை மழை பொழிந்திட வந்த
  • திருவாதிரைத்திரு அவதாரத்திரு வருள் நாள்
  • அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காத்திட வந்தாயே
  • நல்லா கமங்களை அகத்தினில் பதிந்திடத் தந்தாயே
  • சத்தியம் தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையை
  • வழிநடத்தித் தந்தாயே
  • மாதா பிதா குரு தெய்வம் சகாவாய்
  • வாழ்ந்து வணங்கிடச் செய்தாயே
  • இசை இன்பம் இயற்கையாவும்
  • பஞ்ச பூதங்க ளனைத்துமுன் வியாபகமே
  • ஆதியந்தமும் ஆண்டவனும் நீயே, ஆயகலைகளும் நீயே
  • நான் இருக்கப் பயமேன்எனும் உன் மந்திரச்சொல்லே
  • நீயிருக்க ஏதுகுறையென்றெண்ணியே
  • மனம் மகிழ்வு கொள்ளுமே
  • நீயில்லாத இடமில்லை நீ செய்வித்த
  • புனிதச் சேவைகளுக்கும் எல்லையே இல்லை
  • ஆன்மீகம் கல்வி மருத்துவம் இசை குடிநீர் சனாதனம்
  • என அனைத்திலும் ஆக்கம் ஊக்கம் தந்திட்டாய்
  • தார்மீகம் தயை தர்மம் பிரேமை அன்பு
  • கருணை சேவைகளில் வடிவமைத்தாய்
  • புது விடியலில் இருந்து துயிலும் வரை எதிலும்
  • எப்போதும் உன் தாக்கமன்றி
  • எங்கள் வாழ்வியலேது சுவாமி ?
  • உன் அவதார காலத்தில் நாங்கள்
  • வாழ்வது முந்தன் சங்கல்பமே
  • மதுரா பிருந்தாவனக் கோப கோபியராய் அயோத்யா
  • வாசிகளாய் யுகமாய்த் தொடர்ந்துன்னருட்
  • கருணை மழையில் நனைகின்றோம்
  • உன் மலரடி தொழுதிப் பிறவிப் பயனடைகிறோம்
  • ஆயிரமாயிரம் அன்னையர் அன்பா
  • முனதன்பில் திளைக்கிறோம்
  • சனாதன சாரதி ஸ்ரீ சத்யசாயி தெய்வமே
  • உன்பங்கய மலர்த்திருவடிகளுக்குச் சரணாகதியாய்
  • எங்களின் அத்தியந்த ஆத்மார்த்த வந்தனங்களை
  • ஏற்றுக் கொள்வாய் சுவாமி சரணம் போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0