ஆடியிலே

  • ஆடியிலே ஆடி வருகிறாள் ஸ்ரீ சாயி காமாட்சி
  • தேடி வரும் பக்தர்களை நாடிவரும் அன்பர்களைப் பாடி வரு
  • மடியார்களைக், கூடித் தொழும் நற்பவி மனங்களை
  • ஓடி வந்து காத்திடவே ஆடி வரும் ஆழித் தேர் போல
  • அழகாய் வருகிறாள்
  • தன்னைப் பணிபவர் உலகியல் பற்று, பந்தங்களைத்
  • துதித்த பொழுதே, அறவேயும் ஒழித்து விடுகிறாள்
  • பாந்தமாய்க், கரிசனம் கொண்டு காந்தமாய்
  • இதயங்களை ஈர்த்துச் சொந்தமாய்ச் சிம்மாசனத்தில்
  • பிரசாந்தி தரச் சாந்தமாய்க் கொலுவிருக்கிறாள்
  • ஸ்ரீ காமாட்சி தேவியினருட் கடாட்சம் ஒரு கணப்பொழுது
  • அவளைத் துதிப்பவர்மேல் பட்டால்போதும் எல்லோராலும்
  • போற்றி மதிக்கும் நிலையை அடைவர்
  • சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையுடன், வாழ்வியலில்
  • பெரும் அருளைப் பொழிவாள்
  • காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சியா,
  • மெங்கள் சாயி பர்த்தீஸ்வரியே
  • உனக்கு ஆனந்த ஆத்மவந்தனம், அனந்தகோடி சரணாகதிகள்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0