அஞ்சுதல் தேவையில்லை
- சாயி சிவம் அகத்துள்ளிருக்கையில்
- அஞ்சுதல் தேவையில்லை
- இகபரசுகந் தந்தினியவை நல்கிடும் அஞ்சுகமிருக்கையில்
- இனியவையேது மேற்பதில்லை
- சாயி சிவமே தவமதுவே மகாமகமிச் செகத்திலெனும்
- எண்ணம் மாறுவதில்லை
- வல்வினை, அவம், பயம், அல்லல், போக்கி நல்லன மட்டும்
- தரும் நற்பேறு – அது மனித அவதாரத்தில் வந்திட்ட
- தெய்வத்தின் தெய்வம்
- புனித உருவத்தில் பூத்துவந்த புத்தம்புதுச் சாயிதேவ மலரே
- நித்தமொருகதை, அரங்கேற்றும் சத்தியப் புதினப்புதுமையே
- சத்தமின்றிச் சந்ததம் கூறும் சாந்நித்திய சங்கல்பமே
- மொத்தமாய்ச் சரணாகதியில் ஆட்கொள்ளு மானந்த தெய்வம்
- பண்ணிசைத்துப் பாடிவிட்டால் புன்னகைத்துப்
- புரிந்தருள் பாலிக்கும் மென்னகைத் தெய்வம்
- பஜன்பாடுகையில் மலர்களால் பதிலளிக்கும்
- அன்பு மலர்த் தெய்வமது சிவசக்தி ஸ்வரூபம்
- ஸ்ரீ சத்திய சாயீஸ்வர தெய்வச்சிவமே போற்றி போற்றியே
- நகர சங்கீர்த்தனத்தில், நகரும் ஊர்வலத்தில்,
- நகரும் துயரமெல்லாம், நாமஸ்மரணையில்
- நாள்தோறும் நற்கதிதான் கிட்டுமே,
- மனமும்தான் மலருமே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்