நவராத்திரி தேவியராய்
- ஸ்ரீ சத்யசாயி தேவிக்கு முத்தேவியராய்ப்
- போற்றியே நமஸ்காரம்
- செந்தாமரையும் அங்குசம், பாசம், சங்கமுமான
- ஸ்ரீ மகாலட்சுமிதேவியாயும் வெண்தாமரையில்
- வீணை, சுவடி, வியாக்யான முத்திரை
- ஜெபமாலை, யுடனான ஸ்ரீ சரஸ்வதி தேவியாயும்
- சிம்மவாகனத்தில் ஒன்பது வடிவங்களில் அசுரர்களை
- வதம் செய்வித்த அம்பிகையாம்
- ஸ்ரீ உமா, துர்க்கா, தேவி யாயும்
- போற்றியே நமஸ்காரம்
- முக்குணங்கள் களைந்தும் முன்வினைகளைக் கடத்தியும்
- நவவித பக்தியில் திளைத்துச் சத்ய, தர்ம, சாந்தி,
- பிரேமை, அகிம்சை, வழியில் மலர்ந்து
- தர்மத்தில் திளைத்து மனித மாண்பு வளரவே
- அருளவேண்டும் ஸ்ரீ சாயி பர்த்தீஸ்வரியே
- நலன் தரும் நவராத்திரித் திருநாளில் நவமணியாய்
- வந்தே நலம் வாழக்கருணை புரிய வரும்
- நவநிதி அபிநிதியே ஸ்ரீ சத்திய சாயி தேவியே
- சாயி சர்வதேவியே வர வேண்டும்
- போற்றி உன் மலரடி சரணம் போற்றியே சாயிமா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்