ராதையின் கண்ணா

  • மாதங்களில் நான் மார்கழி என்று
  • கீதையிலுரைத்திட்ட மாதவா உன் கீதைப் பாதையில்
  • எங்களுக்குப் புதியபாதை யமைத்திட்டாய்
  • ராதையின் கண்ணா ருக்மணிப் பொன்மணிவண்ண
  • மதுசூதன் கேசவா முரளீதரா
  • கோவிந்தயாதவ முகுந்த சத்யசாயி
  • நாராயணா வருகவே
  • மாயனே தூயனே பர்த்தித்தலச் சாயி கிருஷ்ணா
  • திவ்யதேசங்களின் விஷ்ணு பரமாத்மனே!
  • உன்னில் உலக உயிர்களின் ஜீவாத்மா
  • உறைந்திடத்தானுருகிடுமே
  • பிருந்தாவன நாயகனே நந்தகோப காளிங்க நர்த்தனனே
  • உன் யமுனா தீரமெங்களின் கோகுலம்தான்
  • உன் பிரசாந்தியே தானெங்களின் வைகுந்தம், கைலாயம்,
  • மதுரா, பிருந்தாவனம்
  • அயோத்தியும் சரயுவும், தானே ராமராஜ்யமாய்
  • எங்கள் சாயி கொற்றமாய், முற்றமாய்,
  • முற்றுமாய், முகிழ்ந்திருக்க
  • சித்ராவதி தீரனே நீ சடுதியில் சீராய்ச் சீக்கிரத்தில் வருகவே
  • யமுனா தீரத்திலுன் அதிசயம் அற்புதம் ஆனந்த லீலைகளைக்
  • கண்டிட்ட கோப கோபி ராயுன் அபயகரத்தினாசி
  • யுணர்ந்தவராய்த் தபோவனத்திலுன்
  • அன்புக் கருணையில் திளைத்தவராய்
  • ஆனந்த ஆராதனை செய்திடவே
  • உன் தாமரைப் பாதமே தஞ்சமாய் வணங்கிடுமெங்களைக்
  • காத்திடவே அன்புடனழகாய் வருகவே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0