தூது செல்வாயா வெண் புறாவே

  • அவதாரத்திருநாளில் அன்புத் தூது சொல்லச்
  • செல்ல வேண்டும் வெள்ளைப் புறாவே – நீ
  • யாதும் சாயிநாதனென்றும் சொல்லு
  • சொல்லிவா நல்புறாவே
  • ‘நானிருக்கப் பயமேனெனச்’ சொன்ன நம் சுவாமிக்கு
  • நீ இருக்கக் குறையில்லையெனச் சொல்லி வருவாயே
  • அன்பு மதம் அன்பு மொழி அன்பு இனமாய்
  • வாழ்வியல் வாழ்ந்திட
  • சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை வழியில் நடந்திட
  • மனம், மெய், மொழியில், சாயி சேவையாற்றி வாழ்ந்திட
  • சனாதன சாரதியாய் – நீ வழி நடத்துவாயேவெனத்
  • தூது சொல்லி வருவாயே செல்லப் புறாவே
  • வெள்ளை ஆடையில் சத்யம் தர்மம் சாந்தி பிரேமை
  • அகிம்சையாய் வாழவேண்டும் என்று நித்ய சத்ய
  • அருளுரை உரைப்பாயே என்று இனிய சொல்லாய்ச்
  • சொல்லி வருவாயே என் வெண்புறாவே
  • வெண்ணிற அங்கியில் வெள்ளைப்புறா என்னைப்போல்
  • கூட்டமாய் வெண்ணிற மேகமாய்த்தான் வருவாயே
  • உன் அவதாரப் பிறந்த நாளில் என்றும் சொல்லி வா புறாவே
  • வெள்ளி ஊஞ்சலில் நீ அமர்ந்தாடும் ஜூலா அழகும்
  • எங்களுக்கு விடிவெள்ளிபோல்தான்
  • எனவும் கூறி வருவாயே என்னன்புப் புறாவே
  • சுவாமி உனது அவதார நாள் இன்று
  • அனைவரையும் காத்தருள வேண்டும்
  • என்றும் எங்களுடன் துணையிருந்து அருள்புரிய வேண்டும்
  • பவதாரமாய் இருந்து உன் அவதார மகிமையை
  • அனைவரையும் உணரச் செய்ய வேண்டும்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0