நாற்றிசையும் பரவும்

  • பிருந்தாவன நந்தவனப்பூக்கள் நறுமணம் நாற்றிசையும்
  • பரவிப் பரவசப்படுத்தும்
  • மதுராவின் ஆநிரைக் கூட்டங்கள் கோபால கோவிந்தனுன்
  • வேய்ங்குழல் ஓசையில் மயங்கியே நிற்கும்
  • யது குல கோப கோபியர்கள் பிரபுகிரிதாரி யுன்னருளன்பி
  • லானந்தித்து ஆராதனைதான் புரிவரே
  • மாதவா மதுசூதனா கேசவா கோவிந்தா யாதவா
  • நந்த முகுந்தா என்றே ஆயிரமாயிரம்
  • நாமங்களி லழைத்தால் தானாய்த் தானே
  • வந்தருளியே பரமானந்தமடையும் நந்தகோப
  • கோகுலகிருஷ்ண னுனைக் கண்டு
  • மகிழாதார்தான் யார் ?
  • கோவர்த்தன கிரிதாரியாய்க் கோக் கூட்டம் காத்திட்ட
  • ஆராவமுதனுன் வேணுகானம் கேட்டு
  • ஈரேழுலகமும் ஆனந்தக்கூத்தாடி மகிழுமே
  • யமுனா தீரனாய் ராதையின் கண்ணனுன்ராசக்
  • கீரீடையை ரசிக்காத உள்ளமேது
  • ராதே கிருஷ்ணா இவ்வுலகில் ?
  • மயிற்பீலி அசைந்தாட மதுர மோகன கானம் இசைத்திடும்
  • ஸ்ரீ சத்யசாயிகிருஷ்ணா உன் பரம
  • பாதார விந்தங்களுக்குக் கோடி கோடி
  • வந்தனம் சுவாமி.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0