ஆறுபடை வீடுகளில்
- பழனிமலையில் உன்னருள் வழங்குமழகில்
- உன் அன்புக் கருணை தெரியும்
- கழனிகள்தோறும் விளைந்திடும் நெற்கதிர்களிலுன்
- அமுத வியாபகம் புரியும்
- திருச்செந்தூரின் அலைகளில் உன் அன்பும்
- கருணையும் ஆர்ப்பரிக்கும்
- செவ்வானமும் செவ்விள நீருமுன்னருட்
- னருட்சுவைதனைப் புரியவைக்கும்
- சுவாமிமலையில் உன் பிரணவ மந்திரம்
- விண்ணிலும் ஒலித்து நிற்கும்
- திருத்தணியில் வள்ளி தெய்வ யானையுடனுன்
- மணக்கோலம் சிறக்கும்
- பழமுதிர்ச்சோலையி லுன் னருள்சுனை நீரிலும்
- சுவைக்க இனிக்கும்
- திருப்பரங்குன்றத்தில் உன் தீபம் மலை மீதிலும்
- சுடராய் ஒளிரும்
- வேலிருக்க வினையில்லை மயில் இருக்கப் பயம் இல்லை
- சாயிகந்தன் நீ இருக்கக் கவலையேதுமில்லை
- குமரன் எங்கள் அமரன் கந்தன் எங்கள் சொந்தன்
- வடிவேலன் எங்கள் குலவேலன் என்றுன்
- பக்தர்மனங்க ளுன்னைத்தான் வாழ்த்தும்
- ஸ்ரீ சத்திய சாயி சுப்பிரமணிய தெய்வமே சுபிட்சம்
- அளித்திட வருவாய் அருள் தருவாயே சாயி முருகா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: