புது விடியல்
- சேவல் கூவிப் புது விடியலைப் புதுப்பிக்கச் செய்தது
- காகம் கரைந்து பொழுது புலர்தலைப் புரிய வைத்தது
- குயில் கூடித் துயிலெழுப்பி ஓம்காரம் ஒலிக்கச் செய்தது
- பற்பல பறவை இனமும் (பன்மத பக்தர்களும்)
- கூடித் துயிலெழுப்பி சுப்ரபாதம் ஒலிக்கச் செய்தது
- சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள் கீச்சுக்குரலில்
- அஷ்டோத்திர நாமாவளி இசைத்தது
- எண்ணமெல்லாம் குல்வந்த் அரங்கில்
- பஜனை கேட்க பாட வைத்தது
- வண்ணமய நம் சுவாமியைக் கண்டு மனம்
- ஆனந்தம் கொண்டது, அதிசயம் கண்டது
- மனமும், வயிறும், நிறைந்து கொண்டு
- உணவகச் சேவையில் நிறைந்தது
- நம் சுவாமி பிறந்த இடம் முதல், ஈஸ்வரம்மா நினைவிடம்,
- கோகுலம், சைதன்ய ஜோதி, கல்வித்தலங்கள்,
- மருத்துவமனை என ஓடி நாடித் தேடிப்பாடிப் பார்த்து,
- மகிழ்ந்தது மனது நன்றிகள் கூறி நவில்ந்தது
- சுவாமி படங்கள், புத்தகங்கள் பல்பொருட்கள் வாங்கி
- அளவிலா ஆனந்தமடைந்தது
- மாலை நேர பஜனை பாட, கேட்க, மனதும்
- பறந்து வந்தது, விரிந்து மலர்ந்தது
- தபோவனத் தருவின் தியானத்தில்
- மனம் அமைதி அடைந்தது
- சுவாமியின் கண்காட்சி அரங்கில் பரவசமடைந்தது
- சித்திராவதி நதி தீரம் கண்டு மனம் சித்திரத்தைத்
- தூரிகையில் வரைந்தது, கற்பகவிருட்சம்
- கண்டு மனம் சுவாமியின் பொற்பதம்
- நினைத்து மன மது நெகிழ்ந்தது
- மிட்டாய்கள், பலகாரங்கள், கனிகள், சுவாமி சிறார்களுக்குக்
- கொடுத்து மகிழ்ந்தது நினைவிலசை போட்டது
- கோகுலத்தில் பசுக்கள் பார்த்து மனம் சாயி கோபாலனிடம்
- மதுரா பிருந்தாவனம் யமுனை சென்றடைந்தது
- ஸ்ரீராமர் சீதா லட்சுமணன் காட்சி பார்த்து
- அயோத்தி மிதிலை நோக்கி வணங்கியது
- குடை கணேசனைப் பார்த்து சுவாமியின்
- கொடைக் கருணையை எண்ணி,
- மனம் நன்றி சொல்லி நிறைந்தது
- சாயி சுப்ரம்ணியனைக் கண்டு சுப்ரமணியம்
- சுப்ரமணியம் பாடல் தானாகச் செவியில் ரீங்காரமிட்டது
- சாயி காயத்திரிதேவியின் ஆலயத்தில் சாயி காயத்திரி
- 1008, 108 நாமம் கூறி ஒலித்தது
- சாயி மகாலட்சுமி ஓங்காரேஸ்வரரை மனமுருகித் தொழுதது
- பற்பல சேவைகளில் கண்டு மனம் ஆனந்தித்துச் சிலிர்த்தது
- பர்த்தியாத்திரையில் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து, நெகிழ்ந்தது.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: