‘அன்பு மதம் இனம் மொழி’
- ஞாலமதி லெத்தனையோ அவதாரங்கள் அணிவகுத்தனர்
- காலமதாம் கலியில் கண்கண்ட தெய்வமா யவதரித்தாய்
- ஞானமதைச் சத்தியம் தர்மம் சாந்தி பிரேமை
- அகிம்சையாய் பக்தியில் விதைத்திட்டாய்
- கானமதைச் செவிகுளிரக் கேட்டு
- இன்புற இனிய பஜன்பண்களா யிணைத்திட்டாய்
- சனாதனத்தைச் சாத்தியமாக்கி சாகித்யம் படைத்திட்டாய்
- பன்மதப் பக்தர்க்கும் பிரசாந்தியைப் புகலிடமாய்த் தந்திட்டாய்
- இன்சொல் பேசி இனிதா யிதமாய்ப்
- பணிவாய்ச் சேவைகளாற்றிடப் பணித்தாய்
- கல்வி மருத்துவம் குடிநீர் இசை சனாதன தர்மத்தை
- வழி நடத்தி வாழ்வியலில் வளம் சேர்த்தாய்
- கீதைப்பாதை வழிநடத்திச் சனாதன சாரதியுமாகினாய்
- அன்பு மதம் இனம் மொழியால் அகிலத்தி லரசாட்சி செய்தாய்
- பர்த்திப் பிரசாந்தி மனச்சாந்தி தரும் மகா பேரமைதி யளித்திடும்
- மகா பிரகாந்தியெனப் பிரகடனப் படுத்தினாய்
- வடவிருட்சத் தபோவனத்தில் தியானம் செபம்
- மெய்ஞானம் கிட்டிட வரமளித்தாய்
- பர்த்தித்தலப் பயணத்தை பர்த்தி யாத்திரையாய் உருவாக்கினாய்
- ஒவ்வொரு உள்ளத்திலும் தாய் தந்தை யில்லமாயெண்ணி
- மகிழ்ச்சியாய்க் கருவறையில் உன்னை
- வணங்கிடச் சங்கல்ப மருளினாய்
- பாதார விந்தங்களுக்குச் சந்ததியாய் வந்தனங்கள்
- சமர்ப்பணம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்