இகபர சுகம்
- செகம் புகழும் புண்ணியத்தலம் சாயிராமனின் பர்த்தியே
- அங்கு அகிலமெல்லாம் அகம் மகிழும்
- சாயிநாதனின் அன்பின் ஆட்சியே
- யுகந்தோறும் தொடர், தொடர்ந்திடும், பந்தம் பாந்தமே
- என்றும் இகபரசுகம் தந்தெமையது வாழ வைக்குமே
- பரப்பிரும்மம் பார்த்தசாரதி பஞ்சாட்சரசிவசக்தி யாயும்
- காணும் காட்சியே
- அரியும் அரனுமொன்றென்றே தோன்றும் ரூபமே
- பல பெயர்களில் பல வடிவில் பன்மதப் பக்தர்களும் பார்க்கும்
- தோற்றமே அதிலேதென்றுமில்லைதான் மாற்றமே
- பக்தர்களுக்கில்லை எதிலும் ஏமாற்றமே
- அதுசத்யசாயின் மாட்சியே, சங்கல்ப சாட்சியே
- எங்குமெதிலும் சாயிநாதனின் கீர்த்தியே
- செவ்வங்கியில் உயிர்களின் மனமந்திரத்தில் உலா வந்து
- நிலாவாய்க் குளுமை தரவேண்டும்
- அருள்தர வேண்டும், அன்பும் கருணையுடனே
- அபயஹஸ்த ஆசியிலுன் கருணையில் வரம் தரவேண்டும்
- ஸ்ரீ சத்திய சாயி நாத தெய்வமே போற்றி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: