உதிக்கின்ற செங்கதிரும்
- உதிக்கின்ற செங்கதிருமுன்னரு ளாலுருவாகும்
- துதிக்கின்ற உள்ளமதில் உன் உருவம் மட்டுமே நினைவாகும்
- மதிக்கின்ற மக்களெல்லாமுன் னுருவில்
- அன்பில் நடமாடும் – சாயி
- தகிக்கின்ற தணலதுவு முன்னடிதனில் வந்து தஞ்சம் புகும்
- செவிக்குணவு உன்திருநாமம் கேட்டலே
- இப்புவிக்குணவு நின்திருமேனி வாசம் செய்த
- தரிசனம் சேவித்தலே
- கவிக்கழகுன் துதிப்பாடல்கள் புனைதல் பாடல் கேட்டல்தான்
- சாயி உன் காவி அங்கிக்கு அழகு உன் திருமேனியில்
- அணிவித்தல்தான்
- அடிக்கரும்பின் ருசியாமுன் ‘பங்காரு’ விளித்தலினிமையே
- மாதா பிதாகுரு தெய்வச் சகாவுமாய் அருவுருவாய்
- அருள்பாலிக்கும் ஸ்ரீ சத்திய சாயிநாத
- குருதெய்வமே
- ஸ்ரீ சத்யசாயி சிவராமகிருஷ்ணனே உன் மலரடி போற்றியே
- பணிகிறோம் சரணம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
Help Desk Number: