கர்ம நிவாரம் சாயிபாதம்!
Sairam! This is available only in Tamil*

- உன் கர்மா தீர்ந்தது
 - குறையொன்றுமில்லை
 - பிறவி உனக்கில்லை
 - என்று ஸ்வாமி சொல்லும்
 - சுபதினத்திற்காகவே
 - தவிக்கிறது
 - ஒவ்வொரு ஜீவனும்…
 
- சாயிஸ்ருதியின் தரிசனத்தில்
 - ஸ்வாமி உற்றுப் பார்த்தார்
 - புரியாமல் விழித்தேன்
 - பொற்பாதம் தொழுதேன்.
 
- அங்கொருவர் சொன்னார்
 - ஸ்வாமி உற்றுப் பார்த்தது
 - உன்னையில்லை
 - உன் கர்மாவை
 - உன் பூர்வமுகத்தை
 - புண்ணிய பாவத்தை…
 
- ஜீவனின்மேல் அவர்பார்வை
 - விழும்போதே
 - அதன் கர்மக்கணக்கை
 - வாசித்துவிடுகிறார்.
 
- இப்பிறவியில் ஜீவன்
 - கடைத்தேறுமா?
 - கர்மா தீருமா?
 - அதன் அத்தனை
 - பிறவிகளையும்
 - படம்பிடித்து விடுகின்றன
 - பகவானின் கண்கள்!
 
- உன்னைப்பார்க்குபோது
 - முன்பும் முன்பும்
 - நீ யார் என்பது
 - ஸ்வாமிக்குத் தெரிகிறது!
 - கர்மபாக்கி கடன்பாக்கி
 - அதை ஜீவன் தீர்க்கும்போது
 - பரமாத்மா சாட்சி மட்டுமே
 - என்கிறார் பகவான்.
 
- ஒரு ஜீவனின்
 - ஒட்டுமொத்தப் பிறவிகளின்
 - கர்மமூட்டை சஞ்சிதம்.
 
- இந்தப்பிறவியில்
 - தீர்த்தாக வேண்டும் என்று
 - தீவிரவாதியாய் மிரட்டுவது
 - பிராரப்தம்.
 
- வாவா உன்னைக்
 - கவனித்துக் கொள்கிறேன்
 - என்று
 - அடுத்தபிறவிக்காகக்
 - காத்திருப்பது ஆகாமியம்.
 
- ஸ்வாமி சொல்கிறார்
 - உன்வினைக்கேற்பவே
 - சுழல்கிறது பிறவி.
 - இன்று நிகழ்வதெல்லாம்
 - உன்னால் நேர்ந்தவை;
 - நிச்சயிக்கப்பட்டவை.
 
- அவரவர்க்குரிய
 - கர்மக்கடிதத்தைக்
 - கொடுக்கும்
 - அஞ்சல்காரனே நான்.
 - அதீதபக்தரென்றால்
 - கர்மக்கணக்கை தாண்டியும்
 - கருணைபொழிவதுண்டு!
 
- யாவரேயானாலும்
 - கடந்த பிறவிக்கர்மாவைஅவர்
 - தீர்த்தாகவேண்டும்.
 
- மகான்களும் ரிஷிகளும்
 - கர்மத் தீர்வுக்காய்
 - பிறந்து பிறந்து
 - பிறந்ததுமே இறந்து
 - பிறவிப்பிணி தீர்ப்பதுண்டு.
 - சீதை பட்டதுவும்
 - மீரா பட்டதுவும்
 - சக்குபாய் துடித்ததுவும்
 - தேவகிரியம்மை
 - சீதம்மா பட்டதுவும்
 - கர்மப் பயனே!கர்மப்பயனே!
 
- எல்லாப்பிறப்பும்
 - பிறந்திளைத்தேன் என்று
 - புலம்புகிறார் மணிவாசகர்
 - எத்தனை பிறவிகள்!?
 - எத்தனை உறவுகள்!?
 - அப்பன் எத்தனை அப்பனோ?
 - அம்மைஎத்தனைஅம்மையோ?
 - என்றுபாடுகிறார் பட்டினத்தார்
 - உண்மையான
 - அம்மையப்பன் ஆண்டவனே
 - அல்லவா?
 
- நற்கருமப் பலனால்
 - பிறவியின் ஒருபாதி வேதனை
 - மறுபாதியில் விடுதலை
 - முன்பின்னாய் இது மாறும்.
 - பூர்வபுண்ணியம்
 - வங்கிச்சேமிப்பாயிருந்தால்
 - அராஜகம் செய்தாலும்
 - அவன்
 - சொர்க்கத்தில் மிதப்பான்
 - உச்சகட்டப்புகழ்
 - உயர்செல்வாக்கு
 - புண்ணியம் தீர்ந்ததுமே
 - அவனை
 - நரகம் தன்மடியில்வாரிப்
 - போட்டுக்கொள்ளும்.
 
- ஏன் நடந்தது
 - எதனால் நேர்ந்தது
 - என்று கேட்காதே
 - எல்லாம் உன் பூர்வமூட்டை.
 - நீ செய்ததுதான்
 - திரும்புகிறது உனக்கு
 
- தீராதகால்வலி தலைவலி
 - மேல்வலி வயிற்றுவலி
 - என்று
 - வியாதிகளின்
 - நெடுங்கால முற்றுகை.
 
- காயங்களிலேயே
 - எரிந்துகொண்டிருக்கிறது
 - காலம்
 - கண்ணீரிலேயே
 - மூழ்கியிருக்கிறது
 - வாழ்க்கை.
 - வாழ்வெனும் கடலில்
 - ரணங்களே அலைகளாய்
 - மீண்டும் மீண்டும்
 - பொங்கிவந்து கரையைச்
 - சேதப்படுத்துகின்றன.
 
- வங்கிக் கணக்கிலோ
 - குபேர நிதி
 - வைரவைடூரியங்கள்
 - உடம்பின் நோய்
 - அனுமதிப்பதோ
 - ஒரு கவளம் சோறும்
 - கால்குவளை நீரும்!
 
- வாழும்வயதில்தனிமரமாவதும்
 - பிஞ்சில் உதிர்வதும்
 - இளங்குருத்து விபத்தில்
 - சிதறிப் போவதும்
 - பதறும் வேதனை
 - தொடர்கதையாவதும்
 - கர்மப்பலனே கர்மப்பலனே
 
- இன்னொருத்தியின்
 - குழந்தையைக்
 - குருடாக்கியவளுக்கு
 - இப்பிறவியில்
 - குருட்டுக்குழந்தை.
 
- வைத்தியத்தால்
 - பலரைப் பரலோகம்
 - அனுப்பியவனின் அடுத்தபிறவி
 - படுக்கையிலேயே கிடக்கிறது.
 
- நீர்விரயம் செய்தவனுக்கு
 - நீர்சம்பந்த வியாதி.
 
- உணவை துச்சமாய்
 - வீசி எறிந்தவனே
 - அடுத்த பிறவியில் அதைக்
 - குப்பைத் தொட்டியில்
 - பொறுக்குகிறான்.
 
- பூர்வகொலைகாரனே
 - பொய்வழக்குப்போடப்பட்டு
 - சிறையில் சிதைகிறான்
 - இப்போது.
 
- செய்யாதது வாராது
 - செய்தவினை நுகராமல்தீராது
 
- எந்தவேதனையும்வாசனையும்
 - பூர்வ எச்சம்தான்
 - அடுத்தபிறவியில்
 - அனுபவிக்கும் மிச்சம்தான்.
 
- பூர்வத்தில் நீ போட்டது
 - இப்போது முளைத்திருக்கிறது
 - மூலிகை முளைப்பதும்
 - காளான் முளைப்பதும்
 - உன்னால்தானே தவிர
 - என்னால் இல்லை.
 - எதிரொளி எதிர்ச்சொல்
 - எதிரொலிதான் வாழ்க்கை!
 
- காலத்தொலைக்காட்சியில்
 - தொடரும் உன்
 - கர்மத் தொடர்கதையை
 - முடித்துக் கொள்.
 
- கர்மச் சுழலிலிருந்து
 - விடுதலை பெறு.
 
- மாயன் பதம் பணிந்தால்
 - போயபிழையும்
 - புகுதருவான் நின்றனவும்
 - தூசாகும் என்கிறாள் கோதை.
 
- கர்மாவை மூட்டைகட்டி
 - எங்கும் நீ எறிய முடியாது.
 - தீவிரசாதகத்தால் அதை
 - எரிக்கலாம். கர்மா
 - கொஞ்சம் கொஞ்சமாய்க்
 - குறையும் எரியும்.
 
- அதீத பக்தியால்
 - அழுதழுது ஆண்டவனுக்காய்ப்
 - பரிதவிப்பதால்
 - தைலதாரையாய்ப் புரியும்
 - தானதர்மங்களால்
 - தியாகத்தால்
 - நித்ய நிர்மலப்பண்புகளால்
 - சத்யமாய் உன்கர்மா தீரும்!
 
- அதன்பின் நீ
 - பளிங்குப் பனிமலர் பாரிஜாதம்
 - என் பதமலரில்
 - நித்யவாசம் செய்யும்
 - மனோரஞ்சிதம் பவித்ரபத்ரம்!
 
- பிரேமஸ்வரூபமே!
 - புத்தம்புது மலராய் வந்து
 - மணக்கப்போகும் உனக்காக
 - என் சன்னிதி காத்திருக்கிறது!
 
- என்றும் சாயிசேவையில்
 - கவிஞர்.பொன்மணி
 - -ஸ்ரீ சத்யசாயிகவிதைகள்
 
- ஜெய் சாய்ராம்!
 
  
  Help Desk Number: